இந்தியா
மாலை நேரச் செய்தித் துளிகள் – 26.12.2025

- தமிழ்நாடு கல்லூரி மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கும் தி்ட்டத்தை ஜனவரி 5ம் தேதி முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார். ஜனவரி பிப்ரவரியில் 10 லட்சம் மடிக்கணினிகள் வழங்கப்படும்.
- திருப்பத்தூர் முதல் ஓசூர் வரையிலான புதிய ரயில் வழித்தடம் அமைந்தால் திருப்பத்தூர் ஜங்ஷனாக மாறும்.
- தவெக கட்சிக்கு விசில் சின்னம் கிடைக்க வாய்ப்பு – விஜய் தரப்பு மகிழ்ச்சி – தேர்தல் கமிஷன் கிரீன் சிக்னல்.
- தமிழ்நாட்டில் ரூ.6.74 கோடியில் செயற்கை முறையில் நிலத்தடி நீர்மட்டத்தை அதிகரிக்க திட்டப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
- பயணிகளுக்கு ஏற்ற வகையில் மெட்ரோ ரயில் பெட்டிகளில் நேரடி வழித்தட வரைபடத் திரைகள்அமைக்க மெட்ரோ நிர்வாகம் திட்டம்
- ஏஐ வீடியோக்களுக்கு கன்டென்ட்களில் முத்திரையிடுவது கட்டாயமாகவிருக்கிறது. – ஒன்றிய அரசு தகவல்.
- மார்பக புற்றுநோய் மருந்து செலுத்த நானோ ஊசி – ஐஐடி ஆஸ்திரேலிய ஆராய்ச்சியாளர்கள் புதிய முயற்சி
- குரோம் பிரவுசரில் ஏஐ மோடை அறிமுகப்படுத்துகிறது கூகுள்.


















