இந்தியா
மாலை நேரச் செய்தித் துளிகள் – 27.04.2026

- சொந்த பயன்பாட்டுக்கு ஒருவர் 4.5 லிட்டர் மதுபானம் வைத்திருக்கலாம் என்ற அரசாணை 2025ல் திருத்தப்பட்டது. சமீபத்திய வழக்கில் ஐகோர்ட்டிலும் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. எனவே புதுச்சேரியில் இருந்து 90 மில்லி லிட்டர் மதுபானம் எடுத்து வந்தாலும் கைதுதான். – கடலூர் மாவட்ட மதுவிலக்கு போலீசார் எச்சரிக்கை.
- தூத்துக்குடியில் ரூ.40000 கோடி முதலீட்டில் HD Hyundai நிறுவனத்தின் கப்பல்கட்டும் தளம் அமைப்பதற்கான கட்டுமானப் பணிகள் அடுத்த மாதம் தொடங்கும் எனத் தகவல். 2025ம் ஆண்டு டிசம்பரில் தமிழ்நாடு அரசுடன் இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது குறிப்பிடத்தக்கது.
- தாய்லாந்தில் இருந்து ரூ.100 கோடி மதிப்புள்ள 110 கிலோ போதைப் பொருட்களை இலங்கைக்கு கடத்தி வந்த 22 புத்ததுறவிகள் கொழும்பு விமானநிலையத்தில் கைது செய்யப்பட்டனர்.
- மக்கள் வரிப்பணத்தில் ஊதியம் பெறக்கூடிய (மாவட்ட ஆட்சியர் முதல் உதவியாளர் வரை) அனைத்து நிலை அரசு அலுவலர்களும் 3 வருடங்களுக்கு ஒரு முறை பணியிட மாற்றம் செய்ய வேண்டும் பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை அரசாணை எண் 10 நாள் 07.01.1994
- ராஜிவ் காந்தி கொ* வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு 31 ஆண்டுகளாக சிறையிருந்த பேரறிவாளன், பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு கடந்த 2022ஆம் ஆண்டு விடுதலையானார். தற்போது பேரறிவாளன் சட்டத்துறையில் பட்டம் பெற்று சென்னை உயர்நீதிமன்ற பார் கவுன்சிலில் வழக்கறிஞராக பதிவு செய்துள்ளார்!













