இந்தியா
மாலை நேரச் செய்தித் துளிகள் – 01.05.2026

- சென்னை-கோலை வந்தே பாரத் ரயில், மங்களுரு-கோவை தினசரி ரயில், கண்ணூர்-கோவை தினசரி ரயில், மதுரை-கோலை தினசரி ரயில், ராமேசுவரம்-கோவை தினசரி ரயில்ஆகிய ரயில்கள் வரும் ஆகஸ்ட் மாதம் முதல் மேட்டுப்பாளையம் வரை நீட்டிக்கப்படும். முக்கிய சுற்றுலாத் தலமான ஊட்டிக்கு செல்ல வசதியாக இந்த மாற்றம் நடைமுறைக்கு வருகிறது.
- காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் மே மாத பங்கீடாக 2.5 டிஎம்சி தண்ணீரை தமிழ்நாட்டுக்கு திறந்துவிடகர்நாடகாவுக்கு உத்தரவிடப்பட்டது.
- சாதி மதம் அற்றவர் என சான்று வழங்க வட்டாட்சியருக்கு அதிகாரம் இல்லை. சாதி மதம் அற்றவர் என சுய பிரகடனம் செய்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. விளம்பரத்துக்கு வேண்டுமானால் சாதி மதம் அற்றவர் என்ற சான்று பயன்படும். – சென்னை உயர்நீதிமன்றம்.
- ஜிஎஸ்டி வசூல் கடந்த ஏப்ரல் 2025ல் வசூலான ரூ.2.23 லட்சம் கோடிகளுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு ஏப்ரல் வசூல் பதிய உச்சமாக ரூ.2.43 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. இறக்குமதிகள் மீதான ஜிஎஸ்டி உயர்ந்ததே இதற்கு காரணம் என்ற கூறப்படுகிறது. இதனால் விலைவாசியும் கணிசமாக உயரும் வாய்ப்பு உள்ளது.
- “அமெரிக்கா போருக்காகச் செலவழித்த பணத்தை மட்டும் கொடுத்திருந்தால் உலகில் 8.7 கோடி மக்களின் பசியைப் போக்கியிருக்கலாம்! – உலக வல்லரசுகளின் முகத்திரையைக் கிழித்தெறிந்த ஐக்கிய நாடுகள் சபை!”
- 19 கிலோ வணிக சிலிண்டர் இன்று ஒரே நாளில் ரூ.993 உயர்ந்த ரூ. 3,237 க்கு விற்பனை ஆகிறது. 5 கிலோ சிறிய வகை சிலிண்டர் விலையும் இன்று ஒரே நாளில் ரூ.261 உயர்வு. இந்த சுமை காரணமாகவும் விலைவாசி கணிசமாக உயர வாய்ப்பு. ஓட்டல்கள் சிறுதொழில்கள் கடுமையாக பாதிக்கப்படும் நிலை உருவாகி உள்ளது.
- காஸ் சிலிண்டர் விநியோகத்தில் இன்று முதல் ஓடிபி (OTP) எண் கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஓடிபி எண் வழங்கப்பட்டால் மட்டுமே சிலிண்டர்கள் வழங்கப்பட வேண்டும் என்று எண்ணெய் நிறுவனங்கள் விநியோகிப்பவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளன.













