இந்தியா
மாலை நேரச் செய்தித் துளிகள்- 10.05.2026

- தமிழ்நாடு சட்டமன்றத்தின் தற்காலிக சபாநாயகராக சோழவந்தான் சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ திரு.கருப்பையா பதவி ஏற்பார்.
- நிர்வாக நுணுக்கங்களை விரைவில் கற்றுக் கொள்வீர்கள் என்று நம்புகிறென். எடுத்த எடுப்பிலேயே அரசிடம் பணம் இல்லை என்று ஆரம்பிக்காதீர்கள். பணம் இருக்கு . கொடுக்க மனசும் ஆட்சித் திறனும்தான் தேவை. அனுமதிக்கப்பட்ட அளவுதான் தமிழ்நாட்டு அரசிடம் கடன் இருக்கிறது. வாக்களித்த மக்களை திசை திருப்பாதீர்கள். – விஜய்க்கு மு.க.ஸ்டாலின் எதிர்வினை.
- முதல்வரின் தனிச் செயலாளராக பி. செந்தில்குமார் ஐ.ஏ.எஸ். நியமிக்கப் பட்டார். இவர் இதற்க முன்பு சுகாதாரத் துறைச் செயலராக செயல்பட்டு வந்தவர். ஆதி திராவிடர் நலத்துறைச் செயலாளராக இருந்த லட்சுமிபிரியா வும் முதல்வரின் தனிச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர்களின் பதவிக்காலம் ஓராண்டாக இருக்கும்.
- தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையில்
- தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு நிலை குறித்த ஆய்வுக் குழுக் கூட்டம் நடைபெற்றது!
- திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார் விஜய்!















