இந்தியா
ஞாயிற்றுக்கிழமைகளில் பெட்ரோல் பங்குகள் மூடப்படுமா? வைரலாகும் தகவலின் உண்மை என்ன? – PIB விளக்கம்

சமீபத்தில் சமூக வலைதளங்களில் “ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா, தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, மகாராஷ்டிரா மற்றும் ஹரியானாவில் உள்ள பெட்ரோல் பங்குகள் இனி ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் மூடப்படும்” என்ற தகவல் வேகமாக பரவி வருகிறது. இந்த அறிவிப்பு இந்திய பெட்ரோலிய டீலர்கள் எக்ஸிக்யூட்டிவ் கமிட்டி வெளியிட்டதாக கூறப்பட்டதால் பலரும் அதனை உண்மையென நம்பினர்.
ஆனால் இந்த தகவல் முற்றிலும் போலியானது என மத்திய அரசின் செய்தி சரிபார்ப்பு அமைப்பான PIB Fact Check தெளிவுபடுத்தியுள்ளது. எந்த மாநிலத்திலும் ஞாயிற்றுக்கிழமைகளில் பெட்ரோல் பங்குகளை மூடுவதற்கான முடிவு எடுக்கப்படவில்லை என்றும், சமூக வலைதளங்களில் பரவும் இந்த தகவலை மக்கள் நம்ப வேண்டாம் என்றும் PIB எச்சரித்துள்ளது.
ஏன் இந்த வதந்தி பரவியது?
பிரதமர் Narendra Modi சமீபத்தில் நாட்டில் எரிபொருள் சேமிப்பு அவசியம் குறித்து மக்களிடம் வேண்டுகோள் விடுத்திருந்தார். தற்போதைய உலகளாவிய பொருளாதார மற்றும் எரிசக்தி சவால்களை கருத்தில் கொண்டு மக்கள் பெட்ரோல், டீசல் பயன்பாட்டை குறைக்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.
மேலும் அவர் கூறியதாவது:
- மெட்ரோ வசதி உள்ள நகரங்களில் பொதுப் போக்குவரத்தை பயன்படுத்த வேண்டும்
- தனியாக காரில் பயணம் செய்வதை தவிர்த்து கார்பூலிங் முறையை ஊக்குவிக்க வேண்டும்
- Work From Home, வீடியோ கான்பரன்ஸ், ஆன்லைன் கூட்டங்கள் போன்ற முறைகளை மீண்டும் அதிகரிக்க வேண்டும்
- வெளிநாட்டு சுற்றுலா மற்றும் destination wedding போன்றவற்றை தற்காலிகமாக தவிர்க்க வேண்டும்
மேற்கு ஆசியாவில் நிலவும் பதற்றம் மற்றும் உலகளாவிய supply chain பிரச்சனைகள் காரணமாக இந்தியா எரிபொருள் சேமிப்பில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் பிரதமர் வலியுறுத்தினார்.
PIB என்ன சொல்கிறது?
PIB Fact Check பிரிவு வெளியிட்ட விளக்கத்தில்:
“ஞாயிற்றுக்கிழமைகளில் பெட்ரோல் பங்குகள் மூடப்படும் என்ற தகவல் முற்றிலும் போலியானது. மக்கள் உறுதி செய்யாத தகவல்களை பகிர வேண்டாம்.”
என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், தற்போது வைரலாகும் “Sunday petrol pump closure” தகவலில் எந்த உண்மையும் இல்லை என்பது உறுதியாகியுள்ளது.





















