இந்தியா
ஆதார் இல்லை என்றாலும் வருமான வரி தாக்கல் செய்யலாம் உயர் நீதிமன்றம் அதிரடி..!

வருமான வரி தாக்கல் செய்ய ஆதார் எண்ணுடன் பான் எண் இணைப்புக் கட்டாயம் என்று மத்திய அரசு கூறி வரும் நிலையில் குஜராத் உயர் நீதிமன்றம் ஆதார் எண் இல்லை என்றாலும் வருமான வரி தாக்கல் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
ஆதார் பாதுகாப்பு குறித்த வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில் ஆதார்-பான் இணைப்பினை செய்வது குறித்துக் குஜராத் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. அதற்குத் தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள் ஆதார் இல்லை என்றாலும் பேப்பர் மூலம் தபால் வழியாக வருமான வரி தாக்கல் செய்ய அனுமதி அளிக்க வேண்டும் உத்தரவிட்டுள்ளது.
மத்திய அரசு அன்மையில் பான் – ஆதார் இணைப்பிற்கான கடைசித் தேதியினை 2019 மார்ச் 31 வரை நீட்டித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.














