ஆன்மீகம்
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் தரிசனம் இனிமேல்… ஈசியாக…

கடந்த சில ஆண்டுகளாகவே திருவண்ணாமலை கோயில் தரிசனம் காண்பது மிகவும் கடினமாக மாறிக் கொண்டே வருகிறது. அண்டை மாநிலங்களிலிருந்து வருவோர் மற்றும் சுற்றுலா பயணிகள் என கூட்டம் அலைமோதுவதால் உள்ளுர் பக்தர்களே கோயிலுக்குள் சென்று வர மிகவும் சிரமப்பட வேண்டிய சூழ்நிலையாகி விட்டது. எனவே உள்ளுர் பகதர்கள் வசதிக்காகவே காலையில் ஒரு மணி நேரம் மாலையில் ஒரு மணிநேரம் சிறப்பு வழி வைத்து உள்ளுர்வாசிகளை மட்டும் அந்த வழியே அனுமதித்து வருகின்றனர்.
இந்த நிலையில் வெளியுரிலிருந்து வருபவர்கள் தாங்களும் சுலபமாக அண்ணாமலையாரை காண முடியாதா? என ஏங்குவது தெரிகிறது.
இதோ உங்களுக்காகவே திருவண்ணாமலை அண்ணாமலையார் தேவஸ்தானம் ஆன்லைன் தரிசன புக்கிங் டிக்கெட் வசதியை ஏற்படுத்த முடிவு செய்திருக்கிறது. அதற்கான வேலைகள் நடந்து கொண்டு வருகின்றன. அந்த பணிகள் முடிந்த பிறகு நீங்களும் சுலபமாக அண்ணாமலையாரை காண முடியும்.
அதற்கு நீங்கள் 15 நாட்கள் முன்னதாகவே புக்கிங் செய்ய வேண்டி இருக்கும். அபிஷேகம் புஜைகள் திருவிழாக் காலங்கள் என ஒவ்வொன்றுக்கும் தனித்தனி ஸ்லாட் வைத்திருக்கிறார்கள்.
இந்த ஆன்லைன் புக்கிங்குகள் கார்த்திகை தீபம் மற்றும் பௌர்ணமி கிரிவலம் நாட்களுக்கு மற்றும் புத்தாண்டு மற்றும் திருவிழா காலங்கள் மற்றும் மார்கழி மாத நாட்கள் ஆகியவற்றுக்கு மட்டும் தற்போது பிரத்யேகமாக செயல்படும் வகையில் அமைக்கப்படுகிறது.
மற்றபடி அன்றாட தரிசன டிக்கெட்டுகள் அதற்கென அமைக்கப்பட்டுள்ள ஆலய கவுண்டர்களில் தற்போது கிடைக்கிறது.
வெளியுர் பயணிகள் ஆலயத்தின் இணையதளத்தில் உள்ள அறிவிப்புகளை பார்த்து தெரிந்து கொண்டு அதற்கேற்ப தங்கள் பயண திட்டங்களை அமைத்துக் கொள்ளலாம்.
அதற்கு உங்களுடைய பெயர், மொபைல் எண், ஆதார் அட்டை விவரம் மற்றம் எத்தனை பேர் வருகிறீர்கள் ஆகிய விவரங்களை புர்த்தி செய்ய வேண்டி இருக்கும்.
தரிசன கட்டணம் மற்றும் புஜை கட்டணங்கள் ரூ.20 முதல் ரூ.100 வரை இணையதளத்தில் சரி பாரத்துக் கொள்ளலாம். கட்டணத்தை யுபிஐ முறை மற்றும் வங்கி அட்டைகள் மூலமாக செலுத்தப்படலாம்.
உங்கள் இ-டிக்கெட்டை டவுன்லோடு செய்து ஒரு பிரிண்ட் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். உங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்திற்கு ஒரு மணி நேரம் முன்னதாகவே வந்து விட வேண்டும். வருபவர்கள் உங்கள் ஆதார் அடையாள அட்டையை கண்டிப்பாக கொண்டு வர வேண்டும்.
கிரிவலம் காலங்களில் வாகனங்கள் பார்க்கிங் பாஸ்களும் வழங்கப்படும்.
ஆலயத்தின் அங்கீகரிக்கப்பட்ட இணையதளம் மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் இணையதளம் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை இணையதளம் ஆகியவற்றை மட்டுமே பொதுமக்கள் நாட அறிவுறுத்தப்படுகிறது.
இனி இந்த தரிசனமும் உங்கள் கைவிரல் நுனியில்.
அண்ணாமலைக்கு…. அரோகரா….













