இந்தியா
மாலை நேரச் செய்தித் துளிகள் – 17.04.2026

- சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு சொந்த ஊருக்கு சென்று வாக்களிக்க வசதியாக ஏப்ரல் 21, 22, 23 ஆகிய 3 நாட்களுக்கும் சேர்த்து 10663 பேருந்துகள் இயக்கப் போக்குவரத்துக் கழகம் திட்டமிட்டுள்ளது. சென்னையிலிருந்து தினசரி இயக்க்க்கூடிய 2092 பேருந்துகளுடன் 5574 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
- தொகுதி மறுவரையறை நடைமுறைப்படுத்த எதிர்ப்பு தெரிவித்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எமர்ஜென்சி காலம் போல் சிறை செல்ல நேரிடும் என தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் மிரட்டல்.
- ஜம்மு காஷ்மீர் போல அணைத்து மாநிலங்களையும் அதிகாரமற்ற மாநிலங்களாக ஆக்க தொகுதி மறுவரையறை கொண்டுவரப்படுவதாக ராகுல் காந்தி குற்றச்சாட்டு.
- ‘ஒரே ஒரு பட்டன்.. ஈரான் காலி!’ – பென்டகன் விடுத்த இறுதி எச்சரிக்கை! “Locked and Loaded” நிலையில் அமெரிக்கப் படைகள்!
- தேர்தல் நடத்தை விதிமுறைகள் முடிந்ததும் உடனடியாக தமிழ்நாடு முழுவதும் உள்ள சீமை கருவேல மரங்களை அகற்றும் பணிகளை தொடங்க வேண்டும்” பணிகளை ஒருங்கிணைக்க மாவட்டந்தோறும் DRO நிலையிலான அதிகாரியை நியமிக்க வேண்டும் -உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.
- வடகொரியா கொடுத்த RED ALERT! அலறும் அணுசக்தி முகமை. கட்டுப்பட மறுக்கும் கிம் ஜாங்
- இந்தியாவின் அரசியல் வரைபடத்தையே மாற்ற பாஜக அரசு முயற்சிக்கிறது. தற்போதைய மசோதா மகளிருக்கானது அல்ல.” – மக்களவையில் தொகுதி மறுவரையறை தொடர்பான விவாதத்தில் பங்கேற்று எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி
- கோவை மாவட்டம் வால்பாறையில் சாலையோர பள்ளத்தில் வேன் கவிழ்ந்த விபத்தில் அதில் பயணம் செய்த 16 பேரில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். கேரள மாநிலத்தில் இருந்து சுற்றுலா வந்த வேன் வால்பாறையில் இருந்து பொள்ளாச்சி சென்ற போது 13ஆவது கொண்டை ஊசி வளைவில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்தில் காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.












