இந்தியா
மக்களவை தொகுதிகள் மறுவரையறை மசோதா – பர பர அரசியல் நிகழ்வுகள்

மகளிர் இடஒதுக்கீட்டு மசோதா, மக்களவை தொகுதிகள் மறுவரையறை மசோதா மற்றும் யுனியன் பிரதேசங்களின் தொகுதி மறுவரையறை மசோதா ஆகிய மூன்று மசோதாக்கள் இன்று மக்களவையில் நிறைவேறின.. மசோதாக்களை ஆதரித்து 275 பேரும் எதிர்த்து 185 பேரும் வாக்களித்திருந்தனர். மொத்தமுள்ள 543 உறுப்பினர்களில் 430 உறுப்பினர்கள் மட்டுமே இந்த வாக்கெடுப்பில் பங்கேற்றிருந்தனர்.
முன்னதாக இந்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் தங்களது கடுமையான எதிர்ப்பை தெரிவித்திருந்தன.
மக்களவையில் நிறைவேறிய இந்த மசோதாக்கள் தொடர்பாக நாளை மாலை 4 மணி வரை விவாதம் நடத்த சபாநாயகர் ஓம் பிர்லா அனுமதி அளித்துள்ளார்.
இந்த மசோதாக்களை செயல்படுத்துவது தொடர்பாக ஒரு டிலிமிட்டேஷன் கமிட்டி அமைக்கப்படும். அந்த குழுவின் ஆய்வுக்குப் பின்னர் இது நடைமுறைக்கு வரும்.
இந்த மசோதாக்களை எதிர்த்து யாரும் நீதிமன்றத்தை அணுக முடியாது.
தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தை குறைத்து கூட்டாட்சி கட்டமைப்பை ஆபத்துக்குள்ளாக்கும் இந்த முயற்சியை ஒரு போதும் ஏற்றுக் கொள்ளமாட்டோம் என தென்மாநிலங்கள் கடுமையான போர்க்குரலை எழுப்பி வருகின்றன.
திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புச் சட்டை அணிந்து இன்றைய நாடாளுமன்ற கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
தொகுதி மறுவரையறை தொடர்பாக ராகுல் காந்தியுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொலைபேசியில் பேச்சு நடத்தியுள்ளார்.











