இந்தியா
மகளிர் இடஒதுக்கீடு மசோதா, நாடாளுமன்ற மக்களவையில் தோல்வியடைந்தது.
மத்திய அரசு தொகுதி மறுவரையறையை (Delimitation) முன்னெடுக்கும் நோக்கில் கொண்டு வந்த மகளிர் இடஒதுக்கீடு மசோதா, நாடாளுமன்ற மக்களவையில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை கிடைக்காததால் தோல்வியடைந்தது.

அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்திற்குத் தேவையான மூன்றில் இரண்டு பங்கு ஆதரவு இல்லாததால், இந்த மசோதா முறைப்படி தோல்வியடைந்ததாக அறிவிக்கப்பட்டது.
மசோதாவுக்கு ஆதரவாக 278 வாக்குகளும் எதிர்ப்பாக 211 வாக்குகளும் கிடைத்தன. மூன்றில் இரண்டு பங்கு ஆதரவு இல்லாத்தால் தோல்வி அடைந்ததாக அறிவிக்கப்பட்டது. பெரும்பான்மை கிடைக்காததால் மத்திய அரசு அதிர்ச்சி அடைந்துள்ளது.












