Connect with us

தமிழ்நாடு

6 நாட்களாக நடைபெற்ற ஆசிரியர்கள் போராட்டம் திடீர் வாபஸ்.. இதுதான் காரணம்!

Published

on

சம வேலைக்கு சம ஊதியம் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கடந்த 6 நாட்களாக சென்னை நுங்கம்பாக்கம் டிபிஐ வளாகத்தில் இடைநிலை ஆசிரியர்கள் குடும்பத்தோடு உண்ணாவிரதப் போராட்டம் நடத்திக் கொண்டிருந்த நிலையில் நேற்று திடீரென உண்ணாவிரத போராட்டத்தை வாபஸ் பெற்றுக் கொள்வதாக அறிவித்துள்ளனர்.

கடந்த 6 நாட்களாக இடைநிலை ஆசிரியர்கள் தங்கள் குடும்பத்தோடு சம வேலைக்கு சம ஊதியம் என்ற கோரிக்கையை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் நடத்தி வந்தனர் என்பதும் நான்காவது நாளில் சுமார் 80 பேர் வரை மயக்கமடைந்து அதில் சுமார் 10 பேர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் போராட்டம் செய்யும் ஆசிரியர்கள் குழுவிடம் பேச்சுவார்த்தை நடத்தினார் என்பதும் இந்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததை அடுத்து போராட்டம் தொடரும் என்றும் முதல்வர் இந்த பிரச்சனையில் தலையிடும் வரை போராட்டம் தொடரும் என்று அறிவிக்கப்பட்டது என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் நேற்று தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்தியதோடு இடைநிலை ஆசிரியர்கள் கோரிக்கை குறித்து ஆய்வு செய்ய குழு அமைக்கப்படும் என்றும் தெரிவித்தார். தமிழக முதல்வரின் இந்த அறிவிப்பை அடுத்து தங்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றுக் கொள்வதாக போராட்டம் செய்த ஆசிரியர்கள் குழு தெரிவித்துள்ளனர்.

சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்ற தங்களது கோரிக்கை குறித்து ஆய்வு செய்து தாயுள்ளத்துடன் குழு அமைத்த தமிழக முதல்வருக்கு தங்களது நன்றி என்றும் போராட்டக் குழுவினர் தெரிவித்துள்ளனர். சம வேலைக்கு சம ஊதியம் வழங்கும் முறை குறித்து ஆய்வு செய்ய இன்னும் ஓரிரு நாளில் தமிழக அரசு குழு அமைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?