சினிமா செய்திகள்
அவருடன் இணைந்து ஒரு படம் பண்ண இருந்தேன்: கேவி ஆனந்த் மறைவு குறித்து சிம்பு வருத்தம்!

இயக்குநர் கேவி ஆனந்த் அவர்களுடன் இணைந்து ஒரு படம் பண்ண திட்டமிட்டிருந்தேன். அதற்குள் அவர் மறைந்துவிட்டார்’ என நடிகர் சிம்பு மிகவும் வருத்தப்பட்டு கேவி ஆனந்த் மறைவிற்கு இரங்கல் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:
தொடர்ச்சியான மரணங்கள் அதிர்ச்சியை தருகிறது. மரணம் எதிர்பாராத ஒன்று தான், என்றாலும் நல்ல ஆரோக்கியத்தோடு இருப்பவர்களை, நம்மோடு தினமும் தொடர்பில் இருப்பவர்களை, எதிர்பாராமல் இழப்பது அதிர்ச்சி அளிக்கிறது.
அதிர்ந்து பேசாத நல்ல மனிதர் கேவி ஆனந்த் அவர்கள். கோ படத்தில் நடித்திருக்க வேண்டியது, அப்போது இருந்த சூழலில் தவிர்க்கும்படி ஆகிவிட்டது.
சமீபத்தில் மிக அழகான கதை ஒன்றை எனக்குச் சொல்லியிருந்தார். சேர்ந்து படம் பண்ணலாம் என்று சொல்லி இருந்தேன்.
தினமும் என்னோடு தொடர்பில் இருந்தார். நேற்று வரை பேசிக் கொண்டிருந்தவர், இன்று அதிகாலை மரணம் அடைந்துவிட்டார் என்று சொல்வதை நான் மனம் நம்ப மறுக்கிறது. பொய்ச்செய்தியாக இருக்ககூடாதா என அங்கலாய்க்கிறேன்.
இவ்வளவு சீக்கிரம் அவரை இழந்து இருப்பது மிகுந்த வருத்தத்திற்குரியது. ஒளிப்பதிவாளர்கள் இயக்குனராக வெற்றி பெற்றவர்களில் கேவி ஆனந்த் அவர்கள் மிக முக்கியமானவர்.
நிச்சயம் பேசப்படும் நிறைய படங்களை அவர் தொடர்ந்து தந்திருப்பார். அவசரமாக பயணித்துவிட்டார். இறைவனிடம் திரைத்துறைக்கு அவரது மறைவு பேரிழப்பு.
அவரை இழந்து நிற்கும் குடும்பத்தாருக்கும் நண்பர்களுக்கும் திரையுலகினருக்கும் எனது ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன். கடவுள் கரங்களில் இளைப்பாறட்டும்.
இவ்வாறு சிம்பு தெரிவித்துள்ளார்
#RIPkvanandsir ???? pic.twitter.com/siWJllzlHb
— Silambarasan TR (@SilambarasanTR_) April 30, 2021


















