Connect with us

இந்தியா

கைநிறைய சம்பளம்.. பெரிய நிறுவனத்தில் வேலை.. நகைக்கடையில் திருடியதால் கைதான ஐடி பொறியாளர்..!

Published

on

உலகப் புகழ் பெற்ற ஐடி நிறுவனத்தில் பணிபுரியும் பொறியாளர் ஒருவர் நகைக்கடையில் திருடியதால் கைது செய்யப்பட்ட நிலையில் அவரது வேலையும் பறிபோகும் ஆபத்து உள்ளது

புனேவில் உள்ள உலக புகழ்பெற்ற ஐடி நிறுவனம் ஒன்றில் உயர்மட்ட பொறியாளர் பணியில் அனுவேத் பிரகாஷ் சர்மா என்பவர் பணிபுரிந்து கொண்டிருந்தார். அவர் பணிபுரியும் நிறுவனத்தில் நல்ல அனுபவம் பெற்றதை அடுத்து அவருக்கு கை நிறைய சம்பளம் கிடைக்கிறது என்றும் அது மட்டும் இன்றி நிறுவனத்தின் சார்பில் ஏராளமான சலுகைகளும் கொடுக்கப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

அவர் தனது தேவைகள் போல போக தனக்கு வரும் சம்பளத்தில் மிகப்பெரிய தொகையை சேமிக்கும் அளவுக்கு அவருக்கு வருமானம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சமீபத்தில் புனேயில் உள்ள ஃபோனிக்ஸ் மால் சென்ற அவர் தங்க நகை கடையில் நுழைந்து நகை வாங்குவது போல வளையல்களை திருடி உள்ளதாக தெரிகிறது.

இது குறித்து சிசிடிவி கட்சியின் மூலம் கண்டுபிடித்த கடைக்காரர்கள் அந்த நபரை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர் புனேவில் உள்ள மிகப்பெரிய நிறுவனம் ஒன்றில் உயர்மட்ட ஐடி பொறியாளராக வேலை பார்ப்பது தெரியவந்தது. இவ்வளவு பெரிய பணியில் இருக்கும் அவர் ஒரு சில ஆயிரங்கள் மட்டுமே மதிப்புடைய வளையல்களை திருடியதை பார்த்து நகைக்கடை ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதனை அடுத்து அவர் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டார். அவரிடம் காவல்துறையினர் விசாரணை செய்தபோது ஏற்கனவே கடந்த ஆண்டு இதேபோன்று ஒரு நகைக்கடையில் திருடியதை அவர் ஒப்புக்கொண்டுள்ளார். 31 வயதான அனுவேத் பிரகாஷ் சர்மா இன்னும் பல ஆண்டுகளுக்கு ஐடி துறையில் அனுபவம் பெற இருக்கும் நிலையில் தற்போது அவர் திருட்டு குற்றத்தில் கைது செய்யப்பட்டு இருப்பதை அடுத்து அவரது பணி பறிபோகும் ஆபத்து இருப்பதாக கூறப்படுகிறது.

வணிகம்1 நாள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்1 மாதம் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?