Connect with us

இந்தியா

தங்கத்தை வாங்கி குவிக்கும் தென்னிந்திய மக்கள்.. 5 மாநிலங்களில் விற்பனை ஜோர்..!

Published

on

இந்தியாவில் தங்கத்தின் தேவை எப்போதுமே அதிகமாக இருந்து வரும் நிலையில் தென்னிந்திய மக்கள் அதிக தங்கங்களை வாங்கி குவித்து வருவதாக உலக தங்க நுகர்வோர் சந்தை தகவல் தெரிவித்துள்ளது.

இந்தியாவைப் பொறுத்தவரை தங்கம் என்பது ஆபரணங்களுக்காக மட்டும் இன்றி சேமிப்புக்காகவும் வாங்கி வருகிறார்கள் என்பதும் தங்கத்தை வாங்கி வைக்கும் சேமிப்பு பழக்கம் கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவில் அதிகரித்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

மியூச்சுவல் பண்ட் உள்ளிட்ட எந்த முதலீடு என்றாலும் அதில் ரிஸ்க் அதிகம் இருக்கும் என்றும் ஆனால் தங்கத்தை பொறுத்தவரை நீண்ட நாள் முதலீட்டில் ரிஸ்க் எதுவும் இல்லை என்றும் கண்டிப்பாக 15 சதவீதம் வரை வருமானம் கொடுக்கும் ஒரு சேமிப்பாக தான் தங்கத்தை பொதுமக்கள் பார்த்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தங்கத்தை ஆபரணங்களாக மட்டுமின்றி தங்க கட்டிகளாகவும் நாணயங்களாகவும் குறைந்த செய்கூலி சேதாரத்துடன் மக்கள் வாங்கி வருவதால் விலை உயரும்போது அவர்களுக்கு மிகப்பெரிய வருமானம் கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி பண தேவை ஏற்படும்போது உடனடியாக கையில் இருக்கும் தங்கத்தை அடமானம் வைத்து பணமாக மாற்றிக் கொள்ளும் வசதியும் உள்ளது என்பதும் ஒரு சில நிமிடங்களில் பணம் கிடைத்து விடுவதால் தங்கத்தின் முதலீடு செய்வதில் மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் உலகிலேயே சீனாவில் தான் அதிக அளவு மக்கள் தங்கத்தை வாங்குகிறார்கள் என்ற நிலையில் இரண்டாவதாக இந்தியாவில் தான் அதிக தங்கம் விற்பனையாகி வருகிறது என்பதை குறிப்பிடத்தக்கது. நாட்டின் மொத்த தங்க விற்பனையில் 50 சதவீதத்திற்கும் மேல் திருமணத்திற்காக தான் நகைகள் வாங்குகிறார்கள் என்பதும் அதனை அடுத்து சேமிப்புக்காக சுமார் 40% வாங்குகிறார்கள் என்றும் கருத்துக்கணிப்பு ஒன்று தெரிவித்துள்ளது.

22 கேரட் நகைகள் தான் இந்தியாவில் பெரும்பாலும் விற்பனை ஆகிறது என்றும் 18 கேரட் நகைகளும் ஓரளவு விற்பனை ஆகிறது என்றும் கூறப்படுகிறது. இந்தியாவின் மொத்த தங்க விற்பனையில் வட இந்தியாவை காட்டிலும் தென்னிந்தியாவில் தான் அதிகம் வாங்குகிறார்கள் என்றும் குறிப்பாக தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா மற்றும் தெலுங்கானா ஆகிய ஐந்து மாநிலங்களில் மட்டுமே இந்தியாவின் மொத்த தங்க விற்பனையில் 40 சதவீதம் விற்பனை ஆகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

கடந்த 2021 ஆம் ஆண்டில் 611 டன் தங்க நகைகளை இந்திய மக்கள் வாங்கி உள்ளார்கள் என்றும் அதில் பெரும்பாலும் தென்னிந்தியர்கள் தான் வாங்கி வந்தார்கள் என்றும் தெரிகிறது. தங்கத்தை தற்போது பொதுமக்கள் ஆபரணங்களாகவும் திருமணத்திற்காக வாங்கும் ஒரு பொருளாக மட்டும் பார்க்காமல் சேமிப்புக்காகவும் வாங்குவதால் தான் தங்கத்தின் விற்பனை அதிகரித்து வருவதாக உலக கோல்ட் கவுன்சில் தெரிவித்துள்ளது. தங்க நகைகள் மீதான முதலீட்டை மக்கள் 100 சதவீதம் நம்புகிறார்கள் என்பதையே இது காட்டுகிறது.

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?