Connect with us

இந்தியா

மொபைல்போன் தொலைந்துவிட்டால் உடனே என்ன செய்ய வேண்டும்? இதோ அரசின் முக்கிய அறிவிப்பு..!

Published

on

முன்பெல்லாம் மொபைல் போன் தொலைந்து விட்டால் அவற்றை கண்டுபிடிப்பது என்பது மிகவும் அரிதானது என்பதும் காவல்துறையினரிடம் புகார் அளித்தால் கூட IMEI எண் மூலம் கண்டுபிடிப்பது என்பது சவாலாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் மொபைல் போன் தொலைந்து விட்டால் உடனே என்ன செய்ய வேண்டும் என்ற வழிமுறைகளை இந்திய அரசு வெளியிட்டுள்ளது. இதுகுறித்து பார்ப்போம்

மத்திய உபகரண அடையாளப் பதிவேடு (CEIR), போலி மொபைல் போன் சந்தையைக் குறைப்பதற்கான மைய அமைப்பு என்பதும், தொலைத்தொடர்புத் துறையால் இந்த அமைப்பு நிர்வகிக்கப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த அமைப்பு தற்போது இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் யூனியன் பிரதேசங்களிலும் செயல்பட்டு வருகிறது.

இதன்படி இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் வசிப்பவர்கள் தங்கள் ஸ்மார்ட்ஃபோன்களை தொலைத்தால் உடனே இந்த தளத்தை பயன்படுத்தி தங்கள் மொபைல்போன் இருக்கும் இடத்தை தெரிந்து கொள்ளலா. CEIR தரவுத்தளத்தின்படி, அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் இந்த வசதியை மார்ச் 15 அன்று பெற்றன. செப்டம்பர் 2019ஆம் ஆண்டு இந்த அமைப்பு முதன்முதலில் மகாராஷ்டிராவில் உள்ள தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி, மற்றும் கோவா ஆகிய பகுதிகளில் தொடங்கப்பட்டது. பின்னர் டிசம்பர் 2019 இல் டெல்லிக்கும் சேவையை விரிவுபடுத்தியது. இந்தியாவின் மீதமுள்ள பகுதிகளில் விரிவாக்கம் செய்ய முயன்றபோது கோவிட்-19 தொற்றுநோய் பரவியதால் காலதாமதம் ஆனது.

redmi mobile images 10 prime

இந்த நிலையில் CEIR ஐப் பயன்படுத்த, பயனர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லலாம். அல்லது Android மற்றும் iOSக்கான CEIR பயன்பாட்டை டவுன்லோடு செய்தும் பயன்படுத்தலாம். பயனர்கள் தங்கள் மொபைலின் IMEI எண்ணை முதலில் சமர்பிக்க வேண்டும். எனவே ஒவ்வொரு மொபைல் வாடிக்கையாளர்களும் தங்களுடைய IMEI எண்ணை முதலில் தெரிந்து வைத்து கொள்ளுங்கள். IMEI எண்ணைப் பெற உங்கள் மொபைலில் *#06# என டயல் செய்தால் போதும்,.

உங்கள் ஆண்ட்ராய்டு ஃபோன் அல்லது ஐபோன் தொலைந்துவிட்டால் CEIR ஐ எப்படி பயன்படுத்துவது? என்பது குறித்து தற்போது பார்போம். மொபைல் போனை தொலைத்த நபர் CEIR இணையதளத்தில் முதலில் புகார் செய்ய வேண்டும். புகார் செய்யும் போது மொபைல் எண் மற்றும் சில ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். புகார் அளித்தவுடன் மொபைல்போன் வேலை செய்யாது. திருடன் சிம் கார்டை மாற்றினாலும் வேலை செய்யாது என்பது குறிப்பிடத்தக்கது.

அதன்பின் இந்த புகாரின் நகலை உடனே அருகிலுள்ள நிலையத்தில் FIR பதிவு செய்ய வேண்டும். பின்னர், இணையதளம் மற்றும் ஆப்ஸில் கிடைக்கும் ஆன்லைன் படிவத்தை நிரப்பவும். படிவத்தில் உள்ள சில கட்டாய புலங்களில் மொபைல் எண், மாடல் எண், IMEI 1 மற்றும் 2 எண்கள் மற்றும் இருப்பிடத் தகவல் ஆகியவற்றை பதிவு செய்து காவல்துறையின் FIR காப்பியையும் ஸ்கேன் செய்து பதிவு செய்ய வேண்டும்.

இவை அனைத்தையும் வெற்றிகரமாகச் சமர்ப்பித்த பிறகு, பயனரின் தொலைபேசி 24 மணி நேரத்திற்குள் செயல்படுவது தடுக்கப்படும். மொபைல்போன் செயல்படுவது தடுக்கப்பட்ட பிறகு, இந்தியா முழுவதும் உள்ள எந்த நெட்வொர்க்கிலும் அதைப் பயன்படுத்த முடியாது. உங்கள் ஃபோன் ஒருவேளை கண்டுபிடிக்கப்பட்டால், நீங்கள் சாதனத்தைத் தடைநீக்க வேண்டும். CEIRக்கு தடைநீக்கும் விருப்பம் உள்ளது. அந்த கோரிக்கையை உங்கள் ஐடி மற்றும் பிற விவரங்களைச் சமர்ப்பித்தால் மீண்டும் மொபைல்போன் வேலை செய்யும்.

சினிமா8 hours ago

கஸ்டடி பார்த்து கஷ்டப்பட்ட ரெடியா? இன்னும் ரெண்டு நாளில் ஓடிடியில் ரிலீஸ்!

சினிமா8 hours ago

ஜெயிலர் ரஜினிகாந்த் உடன் போட்டிப் போடும் ஜெயம் ரவி.. இறைவன் ரிலீஸ் எப்போ தெரியுமா?

சினிமா1 day ago

லஸ்ட் ஸ்டோரீஸ் சீசன் 2 வருது.. காமக் கதையில் தமன்னா, கஜோல், மிருணாள் தாகூர்!

சினிமா1 day ago

ஒரே காவிக்கொடி.. ஆதிபுருஷ் டிரெய்லர் வெளியீட்டு நிகழ்ச்சியில் திரண்ட ஒரு லட்சம் பக்தாஸ்!

சினிமா3 days ago

மாலத்தீவில் வெறும் உள்ளாடையுடன் திரியும் சிவகார்த்திகேயன் பட நடிகை!

சினிமா3 days ago

விஜய்யை தொடர்ந்து தனுஷுக்கு ஜோடியாகும் த்ரிஷா.. நம்பர் ஒன் தான் போல!

சினிமா3 days ago

ஸ்டைல் எல்லாம் தாறுமாறாத்தான் இருக்கு.. படம் ஓட மாட்டேங்குதே சிம்பு சார்!

சினிமா3 days ago

பிரம்மாண்டமாக நடந்த எங்கேயும் எப்போதும் நடிகர் சர்வானந்த் திருமணம்!

சினிமா4 days ago

ஒடிசா ரயில் விபத்து: கமல்ஹாசன் முதல் ராஷ்மிகா மந்தனா வரை இரங்கல்

சினிமா5 days ago

காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம் விமர்சனம்: கர்ஜனையா? கழுத்தறுப்பா?

சினிமா5 days ago

காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம் விமர்சனம்: கர்ஜனையா? கழுத்தறுப்பா?

சினிமா5 days ago

வீரன் விமர்சனம்: ஹிப் ஹாப் ஆதி சூப்பர் ஹீரோ கதாபாத்திரத்துக்கு செட் ஆனாரா?

சினிமா6 days ago

திடீரென திருமணத்தை முடித்த KPY தீனா.. இனிமே தான் பொண்ணை லவ் பண்ணனுமாம்!

சினிமா6 days ago

மாமன்னன் இசை வெளியீட்டு விழா.. கமல் முதல் எத்தனை பிரபலங்கள் வந்திருக்காங்க பாருங்க!

சினிமா6 days ago

ஜெயிலர் ஷூட்டிங் நிறைவு.. அப்பாடா ரஜினி முகத்தில் ஒரு தேஜஸ் தெரியுதே.. இந்த முறை மிஸ் ஆகாதோ?

சினிமா3 days ago

விஜய்யை தொடர்ந்து தனுஷுக்கு ஜோடியாகும் த்ரிஷா.. நம்பர் ஒன் தான் போல!

சினிமா3 days ago

மாலத்தீவில் வெறும் உள்ளாடையுடன் திரியும் சிவகார்த்திகேயன் பட நடிகை!

சினிமா4 days ago

ஒடிசா ரயில் விபத்து: கமல்ஹாசன் முதல் ராஷ்மிகா மந்தனா வரை இரங்கல்

சினிமா1 day ago

ஒரே காவிக்கொடி.. ஆதிபுருஷ் டிரெய்லர் வெளியீட்டு நிகழ்ச்சியில் திரண்ட ஒரு லட்சம் பக்தாஸ்!

சினிமா3 days ago

ஸ்டைல் எல்லாம் தாறுமாறாத்தான் இருக்கு.. படம் ஓட மாட்டேங்குதே சிம்பு சார்!

%d bloggers like this: