Connect with us

சினிமா செய்திகள்

குழந்தை பெறாமலேயே தாயான நடிகை பிரியங்கா சோப்ரா!

Published

on

பிரபல பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா குழந்தை பெறாமலே வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றதை அடுத்து அவர் தாயாக மாறியதை சந்தோசமாக தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.

கடந்த 2000ம் ஆண்டு உலக அழகி பட்டம் வென்றவர் பிரியங்கா சோப்ரா என்பதும் அதனை அடுத்து அவர் உலகிலுள்ள அனைவராலும் கவனிக்கப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. நடிகை பிரியங்கா சோப்ராவுக்கு பல திரைப்பட வாய்ப்புகள் வந்தாலும் விஜய் நடித்த தமிழன் என்ற படத்தில்தான் அவர் திரையுலகில் அறிமுகமானார் ஆனால் அதன்பிறகு அவருக்கு தமிழ் படங்களில் வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால் அந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறாததால் அவருக்கு தமிழில் வேறு வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

ஆனால் அதே நேரத்தில் பாலிவுட் திரைப்படங்களில் அவருக்கு வாய்ப்புகள் கிடைத்தது என்பதும் பாலிவுட் திரையுலகில் நம்பர் ஒன் நடிகையாக மாறினார் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி தற்போது ஹாலிவுட் திரைப் படங்களிலும் ஹாலிவுட் வெப்சீரிஸ் களிலும் நடித்து வருகிறார் என்பதும் இந்திய திரை உலகில் மிக அதிகமாக சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவர் என்பதும் உலகின் சக்திவாய்ந்த 100 நபர்கள் என்ற போர்ப்ஸ் பத்திரிக்கையின் பட்டியலில் இடம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நடிகை பிரியங்கா சோப்ரா அமெரிக்க பாடகர் நிக் ஜோன்ஸ் என்பவரை கடந்த 2018-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பின்னரும் அவர் பிசியாக நடித்துக் கொண்டிருந்ததால் குழந்தை பெறுவதற்கு நேரமில்லை என்று கூறப்பட்டது.

இந்த நிலையில் திடீரென பிரியங்கா சோப்ரா தனது சமூக வலைத்தளத்தில் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொண்டதாக அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர்
செய்துள்ள பதிவில், ‘நாங்கள் வாடகை தாய் மூலம் ஒரு குழந்தையை பெற்றுக் கொண்டோம் என்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம். இந்த சிறப்பு மிக்க நேரத்தில் எங்கள் குடும்பம் குறித்து கவனம் செலுத்துவதால் தனிப்பட்ட விஷயங்களுக்கு மதிப்பு அளிக்க வேண்டுமாறு கேட்டுக் கொள்கிறோம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

என்ன குழந்தை பிறந்துள்ளது? குழந்தைக்கு என்ன பெயர் வைக்கப்பட்டுள்ளது? என்பதை பிரியங்கா சோப்ரா தெரிவிக்கவில்லை என்றாலும் மிக விரைவில் அவர் குழந்தை குறித்த முழு விவரங்களை தெரிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் தெற்கு கலிபோர்னியாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த சனிக்கிழமை தான் குழந்தை பிறந்து உள்ளதாகவும் பிரியங்கா சோப்ரா அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ளாமலேயே தாயான நடிகை பிரியங்கா சோப்ராவுக்கு அவரது ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

வணிகம்1 நாள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்1 மாதம் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?