இந்தியா
15 நாட்களில் 24,000 பேர் வேலைநீக்கம்.. 2023 தொடக்கமே இப்படியா?
2023 புத்தாண்டு பிறந்து 15 நாட்களில் உலகம் முழுவதும் 24 ஆயிரம் பேர் வேலை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பல முன்னணி நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்கியது என்பதும் அதனால் கடந்த ஆண்டு வேலை நீக்க நடவடிக்கை அதிகரிக்கப்பட்டது என்பதையும் பார்த்தோம்.
கூகுள், மைக்ரோசாப்ட், ஆப்பிள், ட்விட்டர், பேஸ்புக் உள்ளிட்ட பல நிறுவனங்கள் நூற்றுக்கணக்கானோர் முதல் ஆயிரக்கணக்கானோர் வரை வேலைநீக்க நடவடிக்கை எடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் 2023 ஆம் ஆண்டு பிறந்த பிறகு வேலை நீக்க நடவடிக்கைக்கு முடிவு கட்டப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஜனவரி மாதம் 15 நாட்களுக்குள் 24 ஆயிரம் பேர் வேலை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்த மாதத்தின் 15 நாட்களில் 91க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் 24 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழில்நுட்ப ஊழியர்களை வேலைநீக்கம் செய்துள்ளதாகவும் மேலும் வேலை நீக்க நடவடிக்கை தொடரும் என்றும் கூறப்படுகிறது.
குறிப்பாக அமேசான், சேல்ஸ்ஃபோர்ஸ், காயின்பேஸ் ஆகிய நிறுவனங்கள் நிறுவனங்கள் உள்பட மொத்தம் 24,151 பேர் பணியில் இழந்து உள்ளனர் என வேலை நீக்க கண்காணிப்பு இணையதளமான Layoffs.fyi என்ற இணையதளம் தெரிவித்துள்ளது.
இந்தியாவைப் பொறுத்தவரை ஓலா நிறுவனம் சமீபத்தில் 200 ஊழியர்களை பணி நீக்கம் செய்தது. அதேபோல் பல ஸ்டார்ட் அப் நிறுவனங்களும் ஜனவரியில் பணி நீக்கம் நடவடிக்கை எடுத்துள்ளன. கடந்த ஆண்டு டிசம்பரில் 17,000 ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்ட நிலையில் இந்த ஆண்டு ஜனவரியில் 15 நாட்களுக்குள் 24 ஆயிரம் பேர் வேலை இழந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஆண்டு கடந்த ஆண்டு முழுவதும் ஒரு லட்சத்து 53 ஆயிரத்து 110 பேர் வேலைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் இதில் கூகுள், ட்விட்டர், ஓராக்கில், ஸ்னாப், ஸ்பாட்டிஃபை, இண்டெல், ஆகிய நிறுவனங்கள் அடங்கும் என்றும் கூறப்படுகிறது.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தான் வேலைநீக்க நடவடிக்கையில் உச்சத்தில் இருந்தது என்றும் அந்த ஒரே மாதத்தில் மட்டும் 51,489 பேர் வேலையிழந்தனர் என்றும் கூறப்படுகிறது.
மொத்தத்தில் 2023 ஆம் ஆண்டு ஆரம்பமே அதிர்ச்சி தரும் வகையில் இருக்கும் நிலையில் பணம் வீக்கம் மற்றும் பொருளாதார மந்தநிலை இன்னும் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.