Connect with us

இந்தியா

15 நாட்களில் 24,000 பேர் வேலைநீக்கம்.. 2023 தொடக்கமே இப்படியா?

Published

on

2023 புத்தாண்டு பிறந்து 15 நாட்களில் உலகம் முழுவதும் 24 ஆயிரம் பேர் வேலை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பல முன்னணி நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்கியது என்பதும் அதனால் கடந்த ஆண்டு வேலை நீக்க நடவடிக்கை அதிகரிக்கப்பட்டது என்பதையும் பார்த்தோம்.

கூகுள், மைக்ரோசாப்ட், ஆப்பிள், ட்விட்டர், பேஸ்புக் உள்ளிட்ட பல நிறுவனங்கள் நூற்றுக்கணக்கானோர் முதல் ஆயிரக்கணக்கானோர் வரை வேலைநீக்க நடவடிக்கை எடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் 2023 ஆம் ஆண்டு பிறந்த பிறகு வேலை நீக்க நடவடிக்கைக்கு முடிவு கட்டப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஜனவரி மாதம் 15 நாட்களுக்குள் 24 ஆயிரம் பேர் வேலை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த மாதத்தின் 15 நாட்களில் 91க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் 24 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழில்நுட்ப ஊழியர்களை வேலைநீக்கம் செய்துள்ளதாகவும் மேலும் வேலை நீக்க நடவடிக்கை தொடரும் என்றும் கூறப்படுகிறது.

குறிப்பாக அமேசான், சேல்ஸ்ஃபோர்ஸ், காயின்பேஸ் ஆகிய நிறுவனங்கள் நிறுவனங்கள் உள்பட மொத்தம் 24,151 பேர் பணியில் இழந்து உள்ளனர் என வேலை நீக்க கண்காணிப்பு இணையதளமான Layoffs.fyi என்ற இணையதளம் தெரிவித்துள்ளது.

இந்தியாவைப் பொறுத்தவரை ஓலா நிறுவனம் சமீபத்தில் 200 ஊழியர்களை பணி நீக்கம் செய்தது. அதேபோல் பல ஸ்டார்ட் அப் நிறுவனங்களும் ஜனவரியில் பணி நீக்கம் நடவடிக்கை எடுத்துள்ளன. கடந்த ஆண்டு டிசம்பரில் 17,000 ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்ட நிலையில் இந்த ஆண்டு ஜனவரியில் 15 நாட்களுக்குள் 24 ஆயிரம் பேர் வேலை இழந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஆண்டு கடந்த ஆண்டு முழுவதும் ஒரு லட்சத்து 53 ஆயிரத்து 110 பேர் வேலைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் இதில் கூகுள், ட்விட்டர், ஓராக்கில், ஸ்னாப், ஸ்பாட்டிஃபை, இண்டெல், ஆகிய நிறுவனங்கள் அடங்கும் என்றும் கூறப்படுகிறது.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தான் வேலைநீக்க நடவடிக்கையில் உச்சத்தில் இருந்தது என்றும் அந்த ஒரே மாதத்தில் மட்டும் 51,489 பேர் வேலையிழந்தனர் என்றும் கூறப்படுகிறது.

மொத்தத்தில் 2023 ஆம் ஆண்டு ஆரம்பமே அதிர்ச்சி தரும் வகையில் இருக்கும் நிலையில் பணம் வீக்கம் மற்றும் பொருளாதார மந்தநிலை இன்னும் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.

வணிகம்13 மணி நேரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்4 வாரங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?