இந்தியா
இன்றைய தலைப்புச் செய்திகள் – 16.05.2026

- டாஸ்மாக் கடைகள் செயல்படும் நேரம் இனி பிற்பகல் 12 மணி முதல் இரவு 8 மணி வரை மட்டும் இயங்கும் வகையில் மாற்றிட தமிழ்நாடு அரசு முடிவு.
- நீட் தேர்வில் தொடர்ந்து முறைகேடுகள் நடந்து வருவதால் அதனை நடத்தும் தேசிய தேர்வு முகமையை (NTA) கலைக்க வலியுறுத்தி அகில இந்திய மருத்துவ சங்கம் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது,
- முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் விடுவிக்கப்பட்ட பேரறிவாளன் அவர்களின் வழக்கறிஞர் பதிவை நிறுத்திவைக்க கோரி காங்கிரஸ் எம்பி சுதா தாக்கல் செய்த மனுவை ஏற்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
- த.வெ.க. அரசு பதவியேற்று 6 நாட்கள் ஆகியும் அமைச்சர்களுக்கான இலாகாக்கள் இன்னும் ஒதுக்கீடு செய்யப்படாததால் தமிழ்நாடு முழுதும் அரசுப் பணிகள் ஸ்தம்பித்து நிற்கின்றன.
- இழப்பை சமாளிப்பதற்கு பெட்ரோல், டீசல் விலையை உயர்த்த எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. அதன்படி, தற்போது பெட்ரோல் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு 3 ரூபாய் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், படிப்படியாக லிட்டருக்கு 28 ரூபாய் வரை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக கோடாக் நிறுவனம் கணித்துள்ளது.
- தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் முறைகேடாக வாக்களித்த வெளிநாட்டு குடியுரிமை பெற்றவர்கள் 27 பேர் இதுவரை கைது.
- செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறை இயக்குநராக அருண் தம்புராஜ் ஐஏஎஸ் நியமனம்.
- தங்கம் வெள்ளி மீதான இறக்குமதி வரி 15சதவீதம் உயர்வு. இன்று முதல் அமலுக்கு வருகிறது. உள்நாட்டு சந்தையில் கணிசமாக விலை உயர வாய்ப்பு.
- உத்தரப்பிரதேசத்தில் பெய்த கனமழை மற்றும் கடுமையான சூறாவளிக் காற்றுக்கு 111 பேர் உயிரிழந்ததற்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.
- நாடு முழுவதும் நீட் மறு தேர்வு ஜீன் 21ம் தேதி நடைபெறும் என தேசிய தேர்வு முகமை அறிவிப்பு. கடந்த 3ம் தேதி நடைபெற்ற நீட் தேர்வு வினாத்தாள் கசிவு காரணமாக ரத்து செய்யப்பட்டது.

















