இந்தியா
மாலை நேரச் செய்தித் துளிகள் – 16.05.2026

- அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வகையில் 96.11 ஆக வீழ்ச்சி அடைந்துள்ளது.
- இந்தியாவில் உள்ள அணைத்து பொது சேவை வாகனங்கள் மற்றம் டாக்சிகளில் லொகேஷன் ட்ராக்கிங் டிவைஸ், பேனிக் பட்டன்கள், வேக கட்டுப்பாட்டு கருவிகள் கட்டாயமாக பொருத்தப்பட வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தவறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளது.
- சிபிஎஸ்இ பள்ளிகளில் 9ம் வகுப்பு முதல் மும்மொழி பயில்வது கட்டாயம்: சிபிஎஸ்இ சுற்றறிக்கை
- ஏடிஎம் அட்டை, சாவி எதுவுமே தேவையில்லை! கைகளில் மைக்ரோசிப் பொருத்தும் சுவீடன் மக்கள்! சுவீடன் நாடு வசதி மற்றும் பாதுகாப்பிற்கான ஒரு எதிர்கால அணுகுமுறையை கையில் எடுத்துள்ளது. இதற்காக ஆயிரக்கணக்கான மக்களின் கைகளில் மைக்ரோசிப்களை பொருத்தி வருகிறது. இந்த சிறிய, அதிநவீன சிப்கள் பாரம்பரிய அடையாள அட்டைகள், கிரெடிட் கார்டுகள், பணப்பைகள் மற்றும் சாவிகளுக்கு மாற்றாக செயல்படுகின்றன.
- ஈரானுடனான பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், மத்திய கிழக்கில் அமெரிக்காவின் பெரும் இராணுவக் குவிப்பு நடைபெற்று வருகிறது. பி-2 ஸ்டெல்த் குண்டுவீச்சு விமானங்கள், எஃப்-35 ரக விமானங்கள் மற்றும் எரிபொருள் நிரப்பும் விமானங்கள் உயர் எச்சரிக்கை நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
- ஆந்திராவில் 2-வது குழந்தை பெறும் தம்பதிக்கு ரூ.25000 ஊக்கத்தொகை. 3-வது குழந்தை பெறும் தம்பதிக்கு ரூ.30000. 4-வது குழந்தை பெறும் தம்பதிக்கு ரூ.40000 ஊக்கத்தொகை வழங்கப்படும். – சரிந்து வரும் பிறப்பு வீதத்தை அதிகரிக்க ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவிப்பு.














