இந்தியா
மும்பை விமான நிலையம் 6 மணிநேரம் மூடல்.. என்ன காரணம்?
மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையம் செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் 5 மணி வரையில் மூடப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
உலகின் மிகவும் பிஸியான விமான நிலையங்களில் ஒன்று மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையம்.
மும்பை சர்வதேச விமான நிலையத்தில் ஒவ்வொரு நாளும் 800 விமானங்கள் தரை இறக்குமதி, டேக் ஆப் ஆகின்றன. இந்த ஆண்டு மும்பையில் பருவ மழை காலம் முடிவடைந்துள்ளதால், ஓடு தளத்தைப் பழுது பார்த்து பராமரிக்கும் பணிகள் நடைபெற உள்ளது.
எனவே மும்பை விமான நிலையத்தில் உள்ள இரண்டு விமான ஓடு பாதைகளிலும் வருடாந்திர பழுது மற்றும் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் 5 மணி வரையில் மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமான நிலையம் ஓடுதளம் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் அந்த நேரங்களில் செல்ல இருந்த விமானங்களின் பயண நேரம் மாற்றப்பட்டுள்ளன. இதனால் பயணிகளுக்கு ஏற்பட்ட அசவுகரியத்துக்கு வருத்தம் தெரிவித்துள்ள விமான நிலையம் நிர்வாகம், பயணிகளுக்கு மீண்டும் பயணம் செய்வதற்கான பணிகளைச் செய்வதையும் உறுதி செய்துள்ளது.