இந்தியா
இன்றைய தலைப்புச் செய்திகள் – 21.08.2026

- ஆவின் பால் கொள்முதல் விலை ரூ. 3 உயர்வு. ரூ.38லிருந்து ரூ.41 ஆக உயர்வு.
- டெல்லியில் மாணவர் போராட்டத்தின்போது ஏற்பட்ட வன்முறைச் சம்பவங்கள் குறித்து முழுமையாக விசாரிக்க உச்ச நீதிமன்றம் ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் முன்னாள் சிபிஐ இயக்குநர் உள்ளிட்ட 5 பேர் கொண்ட விசாரணைக் குழுவை அமைத்ததோடு இக்குழு விரைந்து இடைக்கால அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.
- தொகுதி மறுவரையறையில் மாநிலங்களின் பிரதிநிதித்துவம் குறையாததை சட்ட ரீதியாக உறுதி செய்ய வேண்டும் என அமித்ஷா தலைமையில் நடந்த தென் மண்டல கவுன்சில் கூட்டத்தில் விஜய் பேச்சு.
- மேகமலை ஆக்கிரமிப்புகளை அகற்றா விட்டால் இராணுவத்தை அனுப்புவோம் என தமிழ்நாடு அரசுக்கு உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை.
- இந்தாண்டு அரசு பள்ளி மாணவர்கள் 614 பேர் மருத்துவ படிப்பில் சேர்க்கை! ‘மருத்துவ கல்லூரிகளில், அரசு பள்ளி மாணவர்களுக்கான, 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டில், 614 மாணவ மாணவியருக்கு, எம்.பி.பி. எஸ்., – பி.டி.எஸ்., படிக்க இடங்கள் கிடைத்துள்ளன’ என, பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
- ரேஷன் கார்டை எடுத்துச் சென்றுதான் ரேஷன் பொருட்கள் வாங்க வேண்டும் என்று கட்டாயமில்லை. ரேஷன் கார்டு Soft Copy அல்லது ரேஷன் கார்டு நம்பர் இருந்தால் போதும் ரேஷன் கார்டு நம்பரை சொல்லி கைரேகை வைத்து ரேஷன் பொருட்களை வாங்கிக் கொள்ளலாம். – சட்டமன்றத்தில் உணவுத்துறை அமைச்சர் வெங்கடரமணன் விளக்கம்.
- எஸ்பிஐ வங்கி ஏடிஎம்மில் 4 முறைக்கு மேல் பணம் எடுத்தால் 5வது முறை முதல் பணம் எடுக்கும்போது வாடிக்கையாளர்கள் ரூ.15 + ஜிஎஸ்டி தொகையைச் செலுத்த வேண்டியிருக்கும். – அக்டோபர் 1ம் தேதி முதல் அமல்.
- தமிழ்நாட்டுக்காகவே மேகதாது அணை. கர்நாடகாவுக்காக அல்ல. பெங்களுரு நகரின் குடிநீருக்கான 5 டிஎம்சி தண்ணீரை தவிர மற்றவை தமிழ்நாட்டுக்குத்தான் – தென்மாநில முதல்வர்கள் மாநாடு முடிந்து கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார் பேட்டி.
- இன்றைய தங்கம் விலை – கிராம் ஒன்றுக்கு ரூ.110 உயர்ந்து கிராம் ரூ.14710க்கும் சவரன் ரூ.117680க்கும் விற்பனை ஆகிறது.
- இன்றைய வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ஒரு கிராம் ரூ.265க்கும் ஒரு கிலோ பார்வெள்ளி ரூ.265000க்கும் விற்பனை ஆகிறது.
- தமிழ்நாடு கடன்சுமையில் இருப்பதாக முதலமைச்சர் கூறியுள்ளார். அதனால் திமுக எம்எல்ஏக்கள் அனைவரும் கார் வேண்டாம் என முடிவெடுத்துள்ளோம் – எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி.
- FIFA மகளிர் உலக கோப்பை கால்பந்து தொடர் 2027ம் ஆண்டு ஜீன் 24 ம் தேதி பிரேசிலில் தொடங்கும் என அறிவிப்பு.
- சென்னை ஐஐடி கல்வி நிறுவனத்தில் எம்பிபிஎஸ், எம்டி உள்ளிட்ட மருத்துவ படிப்புக்களையும் கொண்டு வரத் திட்டம். இதற்காக மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரி அமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும் – ஐஐடி இயக்குநர் காமகோடி அறிவிப்பு.








