Connect with us

உலகம்

2 மணி நேரத்தில் டாடாவை விட 4 மடங்கு பணக்காரர் ஆன 30 வயது நபர்.. எப்படி தெரியுமா?

Published

on

டாடா நிறுவனத்தின் ரத்தன் டாடா அவர்களின் தனிப்பட்ட சொத்து மதிப்பு சுமார் ரூ.4000 கோடி என்ற நிலையில் இரண்டு மணி நேரத்தில் 30 வயது நபர் ஒருவர் டாடாவிடம் உள்ள சொத்துக்களை விட நான்கு மடங்கு அதாவது 16 ஆயிரம் கோடி ரூபாய் அதிகமாக சம்பாதித்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கொடுக்கின்ற தெய்வம் கூரையை பிடித்துக் கொண்டு கொடுக்கும் என்பது இந்த நபருக்கு மிகச்சரியாகத்தான் இருந்திருக்கிறது. கலிபோர்னியாவை சேர்ந்த இந்த 30 வயது நபர் லாட்டரி சீட்டு வாங்கிய இரண்டு மணி நேரத்தில் அவருக்கு பம்பர் பரிசு விழுந்து உள்ளது. 16 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள அந்த லாட்டரி சீட்டு வென்ற பிறகு அவர் உலகின் மிக மகிழ்ச்சியான நபராக மாறினார்.

இந்தியாவின் தொழிலதிபர் டாடாவிடம் தனிப்பட்ட முறையிலான சொத்து ரூபாய் 4000 கோடி இருக்கும் நிலையில் இரண்டே மணி நேரத்தில் அவரை விட நான்கு மடங்கு மதிப்புள்ள பணக்காரராக அந்த நபர் மாறினார் என்பது குறிப்பிடத்தக்கது. அதிர்ஷ்டம் என்பது இதுதான் என்றும் அதிர்ஷ்ட தேவதை அந்த நபரின் வீட்டிற்குள் காலடி வைத்துள்ளது என்றும் அனைவரும் அந்த நபருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

16 ஆயிரம் கோடிக்கு அதிகமான லாட்டரி சீட்டு பரிசை விழுந்த பிறகு அந்த நபர் கலிபோர்னியாவில் உள்ள மிக உயர்ந்த பிராந்தியத்தில் 200 கோடி ரூபாய்க்கு ஒரு மாளிகையை வாங்கி இருப்பதாக தெரிகிறது. இதற்காக அவர் 25 மில்லியன் டாலர் செலுத்தியதாகவும் பிரிட்டிஷ் செய்தித்தாள் நிறுவனம் ஒன்று செய்து வெளியிட்டுள்ளது. அந்த பகுதியில் பெரும்பாலும் ஹாலிவுட் பிரபலங்கள் மட்டுமே மிகவும் உயர்ந்த மாளிகைகளில் வாழ்ந்து வருகிறார்கள் என்றும் அந்த பகுதியில் இந்த நபர் ஒரு மாளிகையை வாங்கி இருப்பதாகவும் கூறப்படுகிறது.

மேலும் அவருக்கு 16000 கோடிக்கு மேல் லாட்டரி பரிசு விழுந்தாலும் வரிகள் போக அவர் கைக்கு கிடைப்பது 8,180 கோடி என்று கூறப்படுகிறது. இருப்பினும் இவ்வளவு பெரிய தொகையை அவர் ஆடம்பர மாளிகை வாங்கிய பின்னர் வேறு என்னென்ன வாங்கலாம் என்று ஆலோசனையில் இருப்பதாக தெரிகிறது.

அவர் வாங்கிய சொகுசு வீட்டின் மொத்த பரப்பளவு 13 ஆயிரத்து 578 சதுர அடி என்றும் அதில் இரண்டு மிகப்பெரிய அறைகள், ஆறு கழிப்பறைகள், குளியலறைகள் ஐந்து படுக்கை அறைகள், மூச்சு அடைக்க கூடிய வகையில் பிரமிப்பாக உள்ளதாக கூறப்படுகிறது. தரைத்தளத்தில் முழுக்க முழுக்க கண்ணாடிகள் பதிக்கப்பட்டுள்ளதாகவும் இந்த மாளிகையின் உட்படத்தில் உடற்பயிற்சி கூடம், திரையரங்கு, மதுபான அறை, நீச்சல்குளம் உள்ளிட்ட சகல வசதிகளும் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

மேலும் இது ஒரு பால்கனியை கொண்டுள்ளது என்றும் குறைந்தது ஏழு வாகனங்கள் நிறுத்துவதற்கான பார்க்கின் பகுதி உள்ளது என்றும் உலகில் உள்ள மிகவும் காஸ்ட்லியான இடங்களில் இதுவும் ஒன்று என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்த ஆடம்பர பங்களாவை வாங்கிய பின்னர் அவர் மேலும் சில ஆடம்பரமான வீடுகள் மற்றும் பிற பொருட்களையும் வாங்க திட்டமிட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இரண்டே மணி நேரத்தில் லாட்டரி சீட்டின் மூலம் டாடாவை விட நான்கு மடங்கு பணக்காரரான அந்த நபரை குறித்த செய்திகள் ஊடகங்களில் ஆச்சரியமாக வெளிவந்து கொண்டிருக்கின்றன என்பது குறிப்பிடப்பட்டுள்ளது.

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?