Connect with us

உலகம்

ஒரு முழு டீமையே பணிநீக்கம் செய்த மைக்ரோசாப்ட்.. ஒரு இந்தியரின் சோகக்கதை..!

Published

on

உலகின் பல முன்னணி நிறுவனங்கள் கடந்த சில மாதங்களாக பணி நீக்க நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது மூன்றாவது பணி நீக்க நடவடிக்கையாக ஒரு முழு டீமையே பணி நீக்கம் செய்துள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கூகுள், அமேசான் உள்பட பல உலகின் முன்னணி நிறுவனங்கள் கடந்த சில மாதங்களாக பணிநீக்க நடவடிக்கையை எடுத்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். பொருளாதார மந்த நிலை பணவீக்கம் உள்ளிட்ட பல காரணங்களால் பணிநீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் நிலையில் ஏற்கனவே மைக்ரோசாப்ட் நிறுவனம் சமீபத்தில் பத்தாயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்தது.

இந்த நிலையில் தற்போது மேலும் சிலரை பணி நீக்கம் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் பணிபுரிந்த ஆர்டிபிஷியல் இன்டெலிஜென்ஸ் மற்றும் இன்டர்நெட் ஆப் திங்ஸ் ஆகியவற்றுக்கு தொடர்புடைய ஊழியர்களை பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் மூத்த தயாரிப்பு மேலாளராக பணிபுரிந்த இந்திய தொழில்நுட்ப வல்லுநர் வந்தன் கௌஷிக் அவர்கள் இது குறித்து கூறிய போது, ‘நான் எனது சக பணியாளர்கள் பலரைப் போலவே பணிநீக்க நடவடிக்கைக்கு உள்ளாகி உள்ளேன். இந்த வாரம் எனக்கும் எனது குழுவினருக்கும் ஒரு மோசமான வாரமாக தொடங்கி உள்ளது. நான் மட்டுமின்றி எனது குழுவில் இருந்த அனைவருமே பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளது எனக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில வாரங்களாகவே நான் பணி நீக்க நடவடிக்கையை எதிர்பார்த்து காத்திருந்ததால் இது எனக்கு ஆச்சரியமாக இல்லை என்றாலும் வருத்தமாக உள்ளது. நான் சில நாட்களாகவே புதிய வாய்ப்புக்கு தயாராக இருந்தேன் என்றாலும் பணி நீக்க நடவடிக்கை என்ற செய்தியை கேட்ட பிறகு என் மனம் மிகவும் கடினமாக இருந்தது. மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் நான் 8 ஆண்டுகள் வேலை செய்த நிலையில் எனது நேரம் முடிவுக்கு வந்துவிட்டது என்பதை நினைக்கும் போது கண்ணீர் வருகிறது.

பல சவாலான களங்களில் பணி புரியும் வாய்ப்பை நான் பெற்றேன், அந்த வாய்ப்பை நான் மிகவும் ரசித்து செய்தேன், தொழில் ரீதியாகவும் தனிப்பட்ட முறையில் நான் நல்ல வளர்ச்சி அடைந்துள்ளேன். இந்த நிறுவனத்தின் ஒரு பகுதியாக இதுவரை இருந்ததற்கு நான் எனது நன்றியை வெளிப்படுத்திக் கொள்கிறேன். பணிநீக்க நடவடிக்கைக்கு பிறகு மற்ற தொழிலாளர்களைப் போலவே நானும் புதிய வேலையை தேட வேண்டிய நிலையில் உள்ளேன்.

வரவிருக்கும் நாட்களில் எனது அடுத்த கட்ட படிகளை தீர்மானிப்பதில் கவனம் செலுத்துவேன். ஒரு சில விஷயங்கள் தள்ளி போனதை நான் தற்போது முடிக்க முடிவு செய்துள்ளேன் என்று கூறியுள்ளார்.

மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் ஏற்கனவே கடந்த சில வாரங்களுக்கு முன்னர் 10,000 ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்ட நிலையில் தற்போதும் நூற்றுக்கணக்கான ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இருப்பினும் தற்போது மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் 2 லட்சத்து 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?