Connect with us

தமிழ்நாடு

புதிய சட்டத்தை இயற்றுவோம், ஆளுநர் ஒப்புதல் தந்தாக வேண்டும்: சட்டத்துறை அமைச்சர் ரகுபதி அதிரடி!

Published

on

தமிழக அரசு சட்டசபையில் நிறைவேற்றி அனுப்பிய ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் வழங்காமல் திருப்பி அனுப்பியுள்ளார். இந்நிலையில் மீண்டும் இந்த சட்டத்தை நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்புவோம், அவர் ஒப்புதல் தந்தாக வேண்டும் என தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

#image_title

ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்டங்களால் பணத்தை இழந்து தமிழகத்தில் தற்கொலை செய்துகொள்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வந்ததையடுத்து, இந்த ஆன்லைன் சூதாட்டங்களுக்கு தடைவிதிக்கும் சட்டமசோதாவை தமிழக சட்டசபையில் நிறைவேற்றி ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்தது தமிழக அரசு. ஆனால் இந்த சட்டத்துக்கு ஒப்புதல் வழங்காமல் சில மாதங்கள் கிடப்பில் போட்டிருந்த ஆளுநர் நேற்று தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பியுள்ளார். இந்த விவகாரம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

#image_title

இந்நிலையில் இது தொடர்பாக சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதா சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதற்கு சில கேள்விகளை ஆளுநர் கேட்டிருந்தார். அதற்கு விளக்கம் அளித்து விட்டோம்.

ஆனால் இப்போதுதான் முதன் முறையாக மசோதாவை திருப்பி அனுப்பியுள்ளார் ஆளுநர். திருப்பி அனுப்பிய மசோதாவை நாங்கள் மீண்டும் சட்டசபையில் நிறைவேற்றி அனுப்பினால் அதற்கு ஆளுநர் ஒப்புதல் தந்துதான் ஆக வேண்டும் அதுதான் சட்டம். ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை விதிக்க சட்டம் இயற்ற சட்டமன்றத்துக்கு உரிமை உண்டு என நீதிமன்றம் சொல்லி இருக்கிறது. நீதிமன்றமே சொல்கிற போது, அதிகாரம் இல்லை என ஆளுநர் எந்த அடிப்படையில் இந்த சட்ட மசோதாவை திருப்பி அனுப்பினார் என புரியவில்லை என்று தெரிவித்தார்.

வணிகம்5 மணி நேரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்4 வாரங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்2 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு2 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?