தமிழ்நாடு
ஹிஜாப் விவகாரம் குறித்து கமல் டுவிட்: நெட்டிசன்கள் கிண்டல்!

கர்நாடக மாநில கல்லூரி ஒன்றில் ஹிஜாப் அணிய கூடாது என்று கல்லூரி நிர்வாகம் கூறிய பிரச்சனை விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் இது குறித்து பல்வேறு கட்சி தலைவர்கள் தங்களுடைய கருத்தை தெரிவித்து வருகின்றனர்.
மேலும் இதற்கு மத்திய அரசு பதில் அளிக்க வேண்டும் என நேற்று திமுக, காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி இந்த விவகாரம் குறித்து கர்நாடக ஐகோர்ட்டில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் நடிகர் மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் இது குறித்து கூறியிருப்பதாவது: கர்நாடகாவில் நடப்பது கலக்கத்தைத் தூண்டுகிறது. கள்ளமில்லா மாணவர்கள் மத்தியில் மதவாத விஷச் சுவர் எழுப்பப்படுகிறது. ஒற்றைச் சுவர் தாண்டியிருக்கும் பக்கத்து மாநிலத்தில் நடப்பது தமிழ்நாட்டுக்கும் வந்துவிடக் கூடாது. முற்போக்கு சக்திகள் மேலும் கவனமாக இருக்க வேண்டிய காலம் இது.
கமல்ஹாசன் தனது டுவிட்டரில் முற்போக்கு சக்திகள் மேலும் கவனமாக இருக்க வேண்டிய காலம் இது என்று கூறிய நிலையில் அந்த முற்போக்கு சக்திகள் யார் என்பதை கமலஹாசன் தைரியமாக குறிப்பிடலாமே என்று நெட்டிசன்கள் தெரிவித்து வருகின்றனர்.
மேலும் இந்த பிரச்சனையை ஆரம்பித்தது யார்? தூண்டியது யார் என்று அனைவரும் அறிந்ததுதான் என்றாலும் அதை ஒரு கட்சியின் தலைவராக இருந்தும் வெளிப்படையாக கூறாதது ஏன் என்றும் அவருக்கு கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர் .


















