கிரிக்கெட்
ஐபிஎல்லில் 8.40 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்ட தமிழக வீரர்!
2019-ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் வீரர்கள் ஏலம் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த வீரர்களுக்கான ஏலத்தில் தமிழக வீரர் ஒருவர் 8.40 கோடிக்கு போட்டிப்போட்டுக்கொண்டு ஏலம் எடுக்கப்பட்டது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தை சேர்ந்த 27 வயதான வருண் சக்ரவர்த்தியை பஞ்சாப் அணி 8.40 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது. இவர் டிஎன்பிஎல் தொடரில் மதுரை அணிக்காக விளையாடியுள்ளார். சுழற்பந்துவீச்சாளரான வருண் பந்துவீச்சு மட்டுமல்லாமல் பேட்டிங் மற்றும் விக்கெட் கீப்பிங்கிலும் சிறப்பாக செயல்படக்கூடிய ஆல் ரவுண்டர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனால் இவரை ஏலத்தில் எடுக்க அணிகள் போட்டாபோட்டி போட்டுள்ளது. 20 லட்சத்தில் தொடங்கிய இவரது ஏலம் மிகுந்த போட்டிக்கு பின்னர் பஞ்சாப் அணியால் 8.40 கோடிக்கு முடிக்கப்பட்டது.