Connect with us

இந்தியா

இந்தியாவில் முதல்முறையாக கர்ப்பமான அப்பா.. போட்டோஷூட் புகைப்படங்கள் வைரல்..!

Published

on

இந்தியாவில் முதல்முறையாக ஆணாக பிறந்து பெண்ணாக மாறிய ஒருவர் கர்ப்பமாகியுள்ளதை அடுத்து அடுத்த மாதம் அவருக்கு பிரசவம் பார்க்க இருப்பதாக கூறப்படுகிறது.

இந்தியாவை பொருத்தவரை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை மூன்றாம் பாலினம் என்றாலே வெறுக்கத்தக்க ஒரு இனமாக இருந்தது. ஆனால் தற்போது படிப்படியாக மூன்றாம் பாலினத்தவர்களை ஆண் பெண் என இரு இருதரப்புமே ஏற்றுக்கொள்ளும் வகையில் விழிப்புணர்வு மாறி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

திருநங்கைகள் தற்போது நன்றாக படித்து வேலையில் உள்ளனர் என்பதும் திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் இந்தியாவில் ஆணாக இருந்து பெண்ணாக மாறிய திருநங்கை ஒருவர் கர்ப்பமாக இருப்பதாகவும் அவருக்கு அடுத்த மாதம் குழந்தை பிறக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

கேரள மாநிலத்தை சேர்ந்த கோழிக்கோடு என்ற பகுதியைச் சேர்ந்த சகத் மற்றும் ஜியா ஆகிய இருவரும் திருநங்கைகளாக இருந்து திருமணம் செய்து கொண்டனர். சகத் பெண்ணாக பிறந்து ஆணாக மாறியவர் என்பதும் ஜியா ஆணாகப் பிறந்து பெண்ணாக மாறியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த தம்பதிகள் ஒரு குழந்தையை தத்தெடுக்க முடிவு செய்த நிலையில் மூன்றாம் பாலினத்தவர் குழந்தையை தத்து எடுக்க பல்வேறு சட்ட சிக்கல்கள் இருந்தது. இதனை அடுத்து தாங்களே குழந்தை பெற்றுக் கொள்ள அந்த தம்பதிகள் முடிவு செய்தனர். இது குறித்து மருத்துவரிடம் ஆலோசனை செய்த நிலையில் மருத்துவர்கள் குழந்தை பெற்றுக் கொள்ள முடியும் என்று கூறிய நம்பிக்கை காரணமாக அந்த நடவடிக்கையில் இறங்கினார்கள்.

இதனை அடுத்து சகத்துக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டதாகவும் அவருடைய உடலில் எந்த பிரச்சனையும் இல்லை என்றும், ஆணாகப் பிறந்த பெண்ணாக மாறிய ஜியா மூலம் கருத்தரிக்க வாய்ப்பு இருக்கிறது என்றும் கூறப்பட்டது. சகத்துக்கு மார்பகங்கள் அகற்றப்பட்ட போதிலும் கருப்பை உள்ளிட்ட உறுப்புகள் அகற்றப்படாமல் இருந்ததால் அவரால் கர்ப்பமாக முடியும் என்றும் கூறப்பட்டது.

இதனை அடுத்து கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கர்ப்பமான சகத் தற்போது 8 மாத கர்ப்பத்தில் இருப்பதாகவும் அடுத்த மாதம் அவருக்கு குழந்தை பிறக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. குழந்தை பிறந்தவுடன் தாய்ப்பால் வங்கியில் இருந்து தாய்ப்பாலை வாங்கி குழந்தைக்கு கொடுக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்தியாவின் முதல் மூன்றாம் பாலின ஜோடி குழந்தை பெற்றுக் கொள்ள இருப்பதை அவர்களுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன. மேலும் இந்த தம்பதிகள் கர்ப்ப கால போட்டோஷூட் புகைப்படங்களை எடுத்து தங்களது சமூகவலைகளில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

சினிமா செய்திகள்2 hours ago

தொடங்கப்படாத தனுஷ் படம்; அதற்குள் நீக்கப்பட்ட நடிகர்!

கிரிக்கெட்3 hours ago

ஐபிஎல் 2023: 7 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தாவை வீழ்த்தி பஞ்சாப் வெற்றி!

Rajinikanth
சினிமா செய்திகள்3 hours ago

‘செம தலைவா’ மகள் சொன்ன கமெண்ட்; மகிழ்ச்சியை வெளிப்படுத்திய ரஜினிகாந்த்!

Kamal Haasan flew to Taiwan; Viral photo!
சினிமா செய்திகள்4 hours ago

தைவான் பறந்த கமல்ஹாசன்; வைரலாகும் புகைப்படம்!

சினிமா6 hours ago

திட்டமிட்டபடி வெளியாகும் ‘ஜவான்’!

தமிழ்நாடு7 hours ago

சுங்கக் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும்: அன்புமணி ராமதாஸ்!

Uncategorized8 hours ago

தமிழகத்தில் உள்ள குடும்பங்களுக்கு அதிவேக இணைய சேவை: அமைச்சர் மனோ தங்கராஜ் அறிவிப்பு!

தமிழ்நாடு10 hours ago

தமிழகத்தில் 8 புதிய மாவட்டங்கள்: சட்டசபையில் அமைச்சர் தகவல்!

இந்தியா12 hours ago

அடுத்த அவதூறு வழக்கில் சிக்கிய ராகுல் காந்தி: பாட்னா நீதிமன்றம் சம்மன்!

தமிழ்நாடு12 hours ago

ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா… காலம் தாழ்த்தும் ஆளுநருக்கு எதிராக கருப்பு கொடி போராட்டம்!

வேலைவாய்ப்பு3 days ago

CECRI காரைக்குடி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு3 days ago

EPFO-ல் வேலைவாய்ப்பு! மொத்த காலியிடங்கள் 2859

வேலைவாய்ப்பு3 days ago

ரயில்வே துறையில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு3 days ago

ரூ.40,000/- ஊதியத்தில் DRDO ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு4 days ago

ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு3 days ago

டிகிரி முடிவர்களுக்கு UIDAI நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு3 days ago

ரூ.75,000/- ஊதியத்தில் Airports Authority of India-வில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு4 days ago

ரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ் லிமிடெட்டில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு2 days ago

ரூ.2,24,200/- சம்பளத்தில் சுற்றுச்சூழல் வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு3 days ago

ரூ.1,12,400/- ஊதியத்தில் தேசிய நீர் மேம்பாட்டு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!