Connect with us

இந்தியா

நகைக்கடையை கொள்ளையடிக்க 15 அடி சுரங்கப்பாதை தோண்டிய திருடர்கள்.. அதன்பின் நடந்த டுவிஸ்ட்..!

Published

on

நகை கடைக்கு கொள்ளை அடிக்க 15 அடி சுரங்கப்பாதை தோண்டிய திருடர்கள் தங்களது முயற்சி பலனளிக்கவில்லை என்பதை அறிந்து நகைக்கடைக்காரர் இடம் மன்னிப்பு கேட்டுவிட்டு சென்ற சம்பவம் மீரட் நகரில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

மீரட் நகரில் உள்ள பிரதான பகுதியில் தீபக் என்பவர் நகைக்கடை வைத்து இருக்கிறார். இந்த கடைக்கு திருட இரண்டு கொள்ளையர்கள் முடிவு செய்து பல நாட்கள் ஆக நோட்டமிட்டுள்ளனர். அதன் பிறகு கிட்டத்தட்ட 15 நாட்களாக நகை கடைக்கு செல்லும் வகையில் 15 அடி நீளத்தில் சுரங்கம் தோண்டியதாக தெரிகிறது.

இதனை அடுத்து கொள்ளையடிக்க முடிவு செய்த தினத்தில் அந்த திருடர்கள் கேஸ் கட்டர்கள் உள்பட ஆயுதங்களை கொண்டு வந்து நகைக்கடையின் கதவை உடைத்து நகை கடைக்குள் நுழைந்தனர். ஆனால் நகைக்கடையில் உள்ள பெட்டகத்தையே அவர்களால் திறக்க முடியவில்லை. கேஸ் கட்டர்கள் இருந்தும் கேஸ் கட்டர் மூலம் அந்த பெட்டகத்தை திறக்க முடியாததால் அவர்கள் தங்கள் கொள்ளை முயற்சியில் தோல்வி அடைந்தனர்.

மேலும் அந்த பெட்டகம் அருகே கிருஷ்ணர் சிலை இருந்தது. அந்த சிலையை அவர்கள் திருப்பி வைத்துள்ளதாக தெரிகிறது. நாம் திருடுவதை கடவுள் பார்க்க கூடாது என்பதற்காக அவர்கள் சிலையை திருப்பி வைத்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதனை அடுத்து ஒரு கட்டத்தில் இனிமேல் பெட்டகத்தை திறக்க முடியாது என்று முடிவு செய்ததை அடுத்து அந்த கொள்ளையர்கள் சுவற்றின் மேல் ’சாரி’ என்று எழுதி அதன் பிறகு மாயமாகிவிட்டதாக தெரிகிறது.

மறுநாள் தீபக் தனது நகைக்கடையை திறக்க வந்த போது சுவரில் ஓட்டை போடப்பட்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதனை அடுத்து உள்ளே சென்று பார்த்தபோது பெட்டகத்தில் எந்த நகையும் திருடப்படவில்லை என்பதை அறிந்து அவர் நிம்மதி அடைந்தார். இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் காவல்துறையினர் விரைந்து வந்து விசாரணையை தொடங்கினார்.

சிசிடிவி கேமராக்களின் ஹார்ட் டிஸ்க்கையும் திருடர்கள் திருடி சென்று விட்டதால் அந்த பகுதியில் உள்ள மற்ற சிசிடிவி கேமராக்கள் மூலம் திருடர்களை அடையாளம் காண முயற்சி செய்தனர். நீண்ட முயற்சிக்கு பிறகு திருடர்கள் சுன்னு மற்றும் முன்னு ஆகிய இருவர் என அடையாளம் காணப்பட்டனர். அவர்கள் இருவரையும் தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.

நகைக்கடையை கொள்ளையடிக்க சென்ற கொள்ளையர்கள் அந்த முயற்சி பலனளிக்காததால் நகைக்கடை ஓனருக்கு சாரி சொல்லி விட்டு சென்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வேலைவாய்ப்பு6 hours ago

அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!

சினிமா6 hours ago

விக்ரமின் ‘தங்கலான்’ பான் வேர்ல்ட் படமாக வெளியிடத் திட்டம்!

சினிமா6 hours ago

‘பொன்னியின் செல்வன்2’: குந்தவைக்கு ட்வீட் செய்த வந்தியத்தேவன்!

சினிமா7 hours ago

மனைவியுடன் ஜாலி டூர் கிளம்பிய அஜித்! அப்போ ஏகே 62 அப்டேட் அவ்ளோ தானா?

சினிமா7 hours ago

பான் வேர்ல்ட் படமாகும் தங்கலான்; பா. ரஞ்சித்தின் மாஸ்டர் பிளான்!

சினிமா7 hours ago

அகநக அகநக முகநகையே! வெளியானது பொன்னியின் செல்வன் 2 பாடல்!

இந்தியா9 hours ago

மாணவியை காதலித்து திருமணம்.. ரூ.189000 கோடி நிறுவனத்தை நடத்தும் தொழிலதிபர்..!

உலகம்9 hours ago

மனிதர்களுக்கு புற்றுநோய் இருப்பதை எறும்புகள் கண்டுபிடித்துவிடுமா? மருத்துவர்களின் கண்டுபிடிப்பு

சினிமா10 hours ago

ரஜினியுடன் நடிக்க விரும்பும் கன்னட சூப்பர் ஸ்டார்!

தமிழ்நாடு11 hours ago

எம்ஜிஆர் கண்ட சின்னம் நம்பியார் கையில்… விளாசிய டிடிவி தினகரன்!

உலகம்7 days ago

சொந்த நாட்டில் வங்கி திவாலானது கூட தெரியாமல் என்ன செஞ்சீங்க? ஹிண்டன்பர்க் நிறுவனத்தை கிண்டல் செய்யும் நெட்டிசன்கள்!

சினிமா6 days ago

’நாட்டு நாட்டு’ நல்ல பாடலே இல்லை.. எல்லாமே லாபி.. இளையராஜா ரசிகர்கள் விளாசல்!

இந்தியா7 days ago

அதிக சம்பளத்தில் வேலை வேண்டாம்.. ராஜினாமா செய்து குறைந்த சம்பளத்திற்கு செல்லும் இந்தியர்கள்.. என்ன காரணம்?

இந்தியா6 days ago

சிலிக்கான் வங்கி திவாலால் பாதிக்கப்பட்ட இந்திய வங்கிகள் எவை எவை?

இந்தியா6 days ago

முகேஷ் அம்பானி வீட்டு சமையல்காரருக்கு இத்தனை லட்சம் சம்பளமா?

சினிமா6 days ago

இனிமே பிரியங்கா மோகன் பக்கமே வரக்கூடாது; மனைவி போட்ட உத்தரவு நடிகையை மாற்றும் சிவகார்த்திகேயன்?

வணிகம்6 days ago

தங்கம் விலை அதிரடி குறைவு: எவ்வளவு தெரியுமா (15/03/2023)!

வணிகம்7 days ago

தங்கம் விலை அதிரடி உயர்வு: எவ்வளவு தெரியுமா(14/03/2023)!

உலகம்7 days ago

ஆஸ்கர் விருதை பெற்றவர்கள் விற்க முடியுமா? எவ்வளவுக்கு வாங்குவார்கள்?

இந்தியா6 days ago

3 நாட்கள் முதல் மனைவி, 3 நாட்கள் 2வது மனைவி.. ஞாயிறு அன்று தனிமை.. இளைஞரின் வித்தியாசமான வாழ்க்கை..!