Connect with us

இந்தியா

வேலை பறிபோனதை பெற்றோரிடம் தெரிவிக்காத ‘மெட்டா’ ஊழியர்: ஏமாற்றுவதாக மனவருத்தம்!

Published

on

பேஸ்புக் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ‘மெட்டா’ நிறுவனத்தில் பணிபுரிந்த இந்தியர் ஒருவர் வேலையை விட்டு நீக்கப்பட்டுள்ள நிலையில் இன்னும் தான் வேலையை விட்டு நீக்கப்பட்டதை தனது பெற்றோரிடம் சொல்லாமல் இருப்பதாகவும் இதனால் தனக்கு மன வருத்தமாக இருப்பதாகவும் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் பேஸ்புக் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ‘மெட்டா’ நிறுவனம் சுமார் 11 ஆயிரம் ஊழியர்களை வேலை நீக்கம் செய்தது என்பதை பார்த்தோம். செலவு குறைப்பு உள்பட ஒருசில காரணங்களால் இந்த வேலையை நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாக ‘மெட்டா’ நிறுவனம் விளக்கம் அளித்தது.

இந்த நிலையில் ‘மெட்டா’ நிறுவனத்தின் மனிதவள மேம்பாட்டு துறை அதிகாரியாக வேலை பார்த்த இந்தியாவைச் சேர்ந்த திவாரி என்பவர் வேலையில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இவர் என்ன காரணத்துக்காக வேலைநீக்கம் வைக்கப் பட்டார் என்பதை ‘மெட்டா’ நிறுவனம் தெளிவாக தெரிவிக்கவில்லை என்று கூறியுள்ளார்.

இந்த நிலையில் தனது வேலை இழப்பு குறித்து தனது பெற்றோரிடம் இன்னும் தெரிவிக்கவில்லை என்றும் ஒவ்வொரு நாளும் அவர்களை பார்க்கும் போது தனக்கு மிகவும் வருத்தமாக இருப்பதாகவும் தான் வேலை போனதை அவர்கள் அறிந்தால் இந்த வயதில் அவர்கள் மன அழுத்தத்திற்கு ஆளாவார்கள் என்பதால் அவர்களிடம் இன்னும் நான் சொல்லவில்லை என்றும் கூறியுள்ளார்.

ஒருவேளை எனக்கு புதிய வேலை கிடைத்தவுடன் நான் அனைத்து உண்மைகளையும் அவர்களிடம் கூறுவேன் என்றும் அதுவரை ஒவ்வொரு நாளும் அவர்களின் முகங்களை பார்ப்பது, அவர்களிடம் உரையாடுவது ஆகியவை போலியாக இருக்கும் என்றும் அவர் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

வேலை நீக்கம் செய்யப்பட்ட பல ஊழியர்களின் நிலை இதுவாகத்தான் உள்ளது. பெற்றோர் மற்றும் மனைவி குழந்தைகளிடம் இன்னும் வேலை நீக்கம் செய்யப்பட்டதை கூறாமல் இருப்பதாக பலர் அவருடைய சமூக வலைதள பதிவின் கீழ் கமெண்ட்ஸ்களாக பதிவு செய்துள்ளனர். இப்படி ஒரு இக்கட்டான நிலை யாருக்கும் வரக்கூடாது என்றும் ஏராளமான கமெண்ட்ஸ்கள் பதிவாகி வருகின்றன.

வணிகம்18 மணி நேரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்4 வாரங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?