Connect with us

இந்தியா

மெட்ரோ ரயில் வாசலில் நின்ற பெண், மூட முடியாத தானியங்கி கதவுகள்: அதிகாரியின் ஸ்மார்ட் நடவடிக்கை

Published

on

மெட்ரோ ரயிலின் வாசலில் ஒரு பெண் நின்று கொண்டிருந்ததால் தானியங்கி மூட முடியாமல் இருந்தது. இதனை அதிகாரிகள் சுட்டிக் காட்டி அந்த பெண்ணை கீழே இறங்குமாறு அறிவுறுத்தியும் அந்த பெண் கீழே இறங்கவில்லை. அதன் பின் அந்த அதிகாரி எடுத்த ஸ்மார்ட் முடிவு காரணமாக ரயில் கிளம்பியது என்பது குறிப்பிடத்தக்கது.

மும்பையில் மெட்ரோ ரயில்கள் எப்போதும் பிஸியாக சென்று கொண்டு இருக்கும் என்பதும் பெரும்பாலும் பயணிகள் நின்று கொண்டுதான் பயணம் செய்து வருகின்றனர் என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் நேற்று மும்பை மெட்ரோ ரயிலில் ஏறிய ஒரு பெண் இடம் இல்லாத காரணத்தினால் வாசலிலேயே நின்று கொண்டிருந்தார். அப்போது அவர் நின்று கொண்டிருந்தன் காரணமாக தானியங்கி கதவு மூட முடியாமல் இருந்தது.

தானியங்கி கதவு மூடாததால் ரயிலும் கிளம்ப வில்லை. இதனையடுத்து அந்த பெண்ணை இறங்கும்படி சக பயணிகள் கோரிக்கை விடுத்தனர். ஆனால் அந்த பெண் தனக்கு அலுவலகம் செல்ல காலதாமதம் ஆகிவிட்டது என்றும் ரயிலில் இருந்து இறங்க முடியாது என்றும் தெரிவித்தார்.

இதனையடுத்து அங்கு காவல் துறை அதிகாரிகள் மற்றும் ரயில்வே துறை அதிகாரிகள் அந்த பெண்ணிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி ரயிலில் இருந்து இறங்குமாறு கேட்டுக்கொண்டனர். ஆனாலும் அந்த பெண் பிடிவாதமாக இறங்கவில்லை.

இதனை அடுத்து ஒரு அதிகாரி அந்தப் பெண்ணுக்கு தான் சீட்டு தருவதாக கூறி இறங்கும்படி கூறினார். அதனை அடுத்து அந்த பெண் இறங்கிய நிலையில் அவருக்கு ரயில் எஞ்சினில் டிரைவர் அருகே உள்ள விஐபி சீட்டில் அவரை உட்கார வைத்தார். அதன் பின்னரே ரயில் கிளம்பியது.

இந்த சம்பவம் காரணமாக ஒரு சில நிமிடங்கள் ரயில் தாமதமாக ஆனது. இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் சுமார் 8 லட்சம் பேர் இந்த வீடியோவை பார்த்துள்ளனர். இது குறித்து ஏராளமான கமெண்ட்ஸ்களும் பதிவாகி வருகின்றன.

தவறு செய்த ஒரு பெண்ணுக்கு அபராதம் விதிக்காமல் அவருக்கு விஐபி அந்தஸ்து கொடுத்து உள்ளதாக சிலர் விமர்சனம் செய்தனர். ஆனால் அதே நேரத்தில் அந்தப் பெண்ணுக்கும் உள்ளே இடம் கிடைக்குமாறு பயணிகள் சற்று நடந்திருக்கலாம் என்றும் அவரை மட்டுமே குற்றம் சொல்வது சரியில்லை என்றும் கூறி வருகின்றனர்.

 

https://www.instagram.com/p/Clk9S7CIhGc/

வணிகம்12 மணி நேரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்4 வாரங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?