உலகம்
இந்தியா இளைஞர்களுக்கு ஜாக்பாட்! இங்கிலாந்தில் 2 ஆண்டுக்கு வேலைவாய்ப்பு!

இந்தியா யங் புரொஃபெஷனல்ஸ் ஸ்கீம் (India Young Professionals Scheme) என்ற திட்டம் இன்று ஜூலை 22, 2025 முதல் தொடங்கியுள்ளது. இதில் 18 முதல் 30 வயது வரை உள்ள இந்திய இளைஞர்கள் கலந்து கொள்ளலாம். இந்த திட்டத்தில் தேர்வு ஆனவர்கள் இங்கிலாந்தில் 2 ஆண்டுகள் வேலை செய்யவும், வாழவும் அனுமதி பெறுவார்கள். சின்னதொரு படிப்பும் படிக்கலாம்.
Ballot பதிவு இன்று மாலை 1.30 மணிக்கு தொடங்கி, ஜூலை 24, 2025 மாலை 1.30 மணிக்கு முடிவடைகிறது. ஒருவருக்கு ஒரு முறை மட்டுமே பதிவு செய்ய முடியும். ஒரே நபர் ஒருபோதும் பல முறை பதிவு செய்ய முடியாது.
இந்த ஆண்டு 3,000 இடங்கள் உள்ளன. பிப்ரவரியில் நடந்த Ballot-ல் அதிகமான இடங்கள் நிரப்பப்பட்டுவிட்டன. இப்போது மீதமுள்ள இடங்களுக்கு இப்போது விண்ணப்பிக்கலாம்.
Ballot-ல் கலந்து கொள்ள தேவையான தகுதி
இந்திய குடியுரிமை இருக்க வேண்டும்
வயது 18 முதல் 30 வரை இருக்க வேண்டும்
குறைந்தது பட்டம் (Degree) படித்திருக்க வேண்டும்
ரூ.3 லட்சம் வரை சேமிப்பு இருக்க வேண்டும் (2,530 யூரோ)
Ballot-ல் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் என்ன செய்ய வேண்டும்?
90 நாட்களுக்குள் விசா விண்ணப்பிக்க வேண்டும்
விசா கட்டணம் மற்றும் ஹெல்த் சர்ச்சார் (1,552 யூரோ) கட்ட வேண்டும்
பாஸ்போர்ட், புகைப்படம், கைரேகை (Biometric) கொடுக்க வேண்டும்
Ballot முடிவுகள் 2 வாரங்களுக்குள் Email மூலம் வரும். அதில் தேர்வு ஆனவர்களுக்கு மட்டும் விசா விண்ணப்பிக்க அழைப்பு வரும்.
இங்கிலாந்தில் வேலை செய்ய, படிக்க, வாழ விரும்பும் இளைஞர்கள் இதை தவற விடாமல் பதிவு செய்யுங்கள்!


















