Connect with us

ஆன்மீகம்

திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் தமிழ்நாடு அரசு ஏற்படுத்த உள்ள புதிய தங்கும் விடுதி மற்றும் இளைப்பாறும் மண்டபங்கள்

Published

on

தென்னிந்தியாவின் புகழ்பெற்ற சைவத் திருத்தலம் திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயில். இங்கு மலையை வலம் வந்து இறைவனை வணங்குவது பக்தர்களின் வழக்கமாக உள்ளது. ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி பிரதோஷம் மற்றும் கிருத்திகை நாட்களில் லட்சக்கணக்கான மக்கள் இங்கு கிரிவலம் வருகின்றனர்.

சமீப நாட்களாக இங்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை தொடர்ந்து கூடிக்கொண்டே வருகிறது. வரும் பக்தர்கள் தங்கிடவும் இளைப்பாறவும் தனியார் நடத்தும் விடுதிகள்தான் உள்ளன. அவற்றில் சில காலங்களாக கட்டணக் கொள்ளை அதிக அளவில்  நடந்து வருகிறது. தமிழ்நாடு மட்டுமல்ல அண்டை மாநிலங்களிலிருந்து வரும் பக்தர்கள் படும்பாடு வார்த்தைகளால் சொல்ல இயலாத அளவில் உள்ளது.

எனவே, தமிழ்நாடு அரசு பக்தர்களின் வசதிக்காக கிரிவலப் பாதையில் ஏழு இடங்களில் இளைப்பாறும் மண்டபங்கள் அமைத்திட திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் புதிதாக ஒரு தங்கும் விடுதியை அமைக்கவும் அரசு முடிவு செய்து உள்ளது.

அதன்படி, கிரிவலப்பதையில் சோணாதி தோப்பு அருகில், ரூ.64.30 கோடியில் 2,10,531 சதுர அடி பரப்பளவில் 476 பேர் தங்கும் வகையில் புதிய தங்கம் விடுதி அமைக்க ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது. அதில் 2 நபர்கள் தங்கம் வகையில் 128 அறைகளும், 6 நபர்கள் தங்கும் வகையில் 24 அறைகளும், 10 நபர்கள் தங்கும் வகையில் 6 அறைகளும் அமைக்கப்பட உள்ளன. நான்கு தளங்கள் கொண்ட குடியிருப்பு வடிவிலான 8 வில்லாக்கள் கொண்ட இந்த விடுதி அறைகள் குளிர்சாதன வசதி, லிப்ட், பார்க்கிங் வசதி, உணவகம் உள்ளிட்ட வசதிகள் ஒரே இடத்தில் இருக்கம் வகையில் அமைக்கப்பட உள்ளது.

இதேபோல், கிரிவலப்பதையில் 14 இடங்களில் ரூ.22.11 கோடி மதிப்பில் 98367 சதுர அடி வரப்பில் 213 கழிவறைகள், 52 குளியலறைகள், 24 மாற்றத் திறனாளிகளுக்கான கழிவறைகள், 213 இடங்களில் சிறுநீர் கழிப்பிட வசதிகள் அமைக்கப்படுகின்றன.

ஒரு மண்டபத்தில் 550 நபர்கள் இளைப்பாறும் வகையில் மொத்தம் 7 இடங்களில் 61766 சதுர அடி பரப்பளவில் இளைப்பாறும் மண்டபங்கள் அமைத்திடவும் நிர்வாக அனுமதி மற்றும் தொழில்நுட்ப அனுமதியும் வழங்கப்பட்டு ஒப்பந்தங்கள் கோரப்பட்டுள்ளன. இந்த பணிகள் விரைவில் தொடங்கப்பட்டு ஓராண்டுக்குள் முடிக்கப்படும் என நகராட்சி அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

இந்தியா45 minutes ago

திருச்சி டூ நியு ஜலப்பைக்குரி புதிய அம்ரித் பாரத் ரயில் சேவை 17ம் தேதி தொடங்குகிறது

இந்தியா1 மணி நேரம் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் இதுவரை – 13.01.2026

ஆன்மீகம்6 மணி நேரங்கள் ago

தமிழ்பஞ்சாங்கம் 13 ஜனவரி 2026 | இன்றைய திதி, நட்சத்திரம், ராகு காலம்!

ஆன்மீகம்7 மணி நேரங்கள் ago

13 ஜனவரி 2026 தினசரி ராசிபலன் | இன்றைய நாள் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம்?

இந்தியா15 மணி நேரங்கள் ago

கல்லில் காகிதங்களா!!! எழுத முடியுமா? செதுக்க வேண்டாமா?

இந்தியா16 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 12.01.2026

இந்தியா24 மணி நேரங்கள் ago

தேவதைகளின் இறக்கைகளுக்கு சக்தி கொடுக்கும் கனரா வங்கி – மகளிருக்கு 3 முத்தான சேமிப்புக் கணக்கு திட்டங்கள்

இந்தியா1 நாள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் இதுவரை – 12.01.2026

தினபலன்1 நாள் ago

இன்றைய ராசிபலன் | 12 ஜனவரி 2026 | Today Horoscope in Tamil

இந்தியா2 நாட்கள் ago

இன்றைய நீதிமன்ற செய்தி – பெற்றோர் உயில் எழுதாமல் இறந்தால் என்ன நடக்கும்?

ஆன்மீகம்6 நாட்கள் ago

பொங்கல் 2026: இந்த ஆண்டு தை பொங்கல் எப்போது? பொங்கல் வைக்க உகந்த நேரம் இதோ!

சினிமா செய்திகள்7 நாட்கள் ago

ஜனநாயகன் படத்திற்கு ஏதோ ஒரு சான்றிதழ் கொடுக்கலாம்: சீமான் கருத்து

வணிகம்7 நாட்கள் ago

சென்னையில் முட்டை விலை 20 காசுகள் குறைவு: புதிய விலை அறிவிப்பு

வணிகம்6 நாட்கள் ago

இந்தியாவில் தங்க டிமொனிடைஸேஷன் வந்தால் எந்த மாதிரியான நடவடிக்கைகள் எடுக்கப்படும்?

சினிமா6 நாட்கள் ago

Bigg Boss Tamil 9: ஒரே நேரத்தில் இரு ரெட் கார்டு – பார்வதி, கம்ருதீனுக்கு சம்பளம் கிடையாதா? உண்மை என்ன?

சினிமா செய்திகள்7 நாட்கள் ago

விஜய்யின் ‘ஜன நாயகன்’ படத்தை சென்சார் செய்யும் புதிய தணிக்கை குழு.. எப்போது தெரியுமா?

இந்தியா7 நாட்கள் ago

மத்திய அரசு மற்றும் தமிழ்நாடு அரசு: யார் அளவுக்கு அதிகமாக கடன் பெறுகிறார்கள்?

வணிகம்6 நாட்கள் ago

இந்தியாவில் தங்கம் டிமொனிடைஸேஷன் நடந்தால் என்ன நடக்கும்?

சினிமா செய்திகள்7 நாட்கள் ago

இந்தியாவில் திரைப்படங்களுக்கு வழங்கப்படும் சென்சார் சான்றிதழ்கள் என்னென்ன? முழு விளக்கம்

தமிழ்நாடு7 நாட்கள் ago

அரசு பள்ளி மாணவர்களுக்கு மாதம் ரூ.1000: தமிழ்ப் புதல்வன் திட்டத்திற்கு விண்ணப்பிப்பது எப்படி?

Translate »