Connect with us

தமிழ்நாடு

வெப்ப அலையை எப்படி எதிர்கொள்ள வேண்டும்: சுகாதாரத் துறையின் வழிகாட்டுதல்கள்!

Published

on

கோடை காலம் தொடங்கவுள்ள நிலையில், இப்போதே வெயில் வாட்டி வதைக்க தொடங்கி விட்டது. இந்நிலையில், தமிழ்நாட்டில் வெப்ப அலையை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என சில வழிகாட்டு நெறிமுறைகளை சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. இதனை அனைத்து மாவட்ட துணை சுகாதார இயக்குநர்களுக்கும், தமிழ்நாடு பொதுச் சுகாதாரத் துறை அனுப்பி வைத்துள்ளது.

வழிகாட்டு நெறிமுறைகள்

  • வெப்ப அலையை எதிர்கொள்வதற்கு, மாவட்ட அளவிலான செயல் திட்டங்களை வகுக்க வேண்டியது அவசியம். இந்த செயல் திட்டங்கள், மத்திய அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி இருத்தல் வேண்டும்.
  • மருத்துவ அலுவலர்கள் அனைவரும், வெப்ப பாதிப்புகளை கண்டறிவதில் திறமை பெற்றிருத்தல் வேண்டும்.
  • அதீத வெப்பத்தால் என்னென்ன தீமைகள் உண்டாகும் என்பது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
  • ORS பாக்கெட்டுகள் மற்றும் ஐஸ் பேக்குகள் போன்ற அத்தியாவசியமான மருந்துகளை எப்போதுமே போதுமான அளவு கையிருப்பு இருத்தல் வேண்டும்.
  • அதிக வெப்பத்தால் பாதிக்கப்படுபவர்கள் குறித்த தகவல்களை உடனுக்குடன் இணையத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
  • அதீத வெப்பத்தால் உண்டாகும் பக்கவாதம் மற்றும் இறப்பு போன்றவற்றை தினமும் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
  • அதீத வெப்பத்தால் சிகிச்சை பெற்று வருபவர்களின் பட்டியலை அனைத்து மருத்துவமனைகளிலும் முறையாக பராமரிக்க வேண்டும்.
  • தேவைக்கு அதிகமான அளவில் குடிநீர், குளிரூட்டும் கருவிகள் மற்றும் ஆம்புலன்ஸ் வண்டிகளில் ஐஸ் பாக்கெட்டுகள் தயார் நிலையில் இருத்தல் வேண்டும்.
  • குளிரூட்டும் கருவிகள் மற்றும் இதர மின் சாதனங்களுக்கு தடையின்றி மின்சாரம் கிடைப்பதை உறுதி செய்தல் வேண்டும்.

பொதுமக்களுக்கான அறிவுரைகள்

  • பொதுமக்கள் அனைவரும் அதிக தண்ணீர் குடிக்க வேண்டும்.
  • முடிந்த வரையில் வீட்டுக்குள்ளேயே இருப்பது நல்லது.
  • ஒருவேளை வெயிலில் செல்லும் சூழ்நிலை உருவானால் குடை அல்லது உடலை முழுமையாக மறைக்கும் பருத்தி ஆடைகள் போன்றவற்றை பயன்படுத்த வேண்டும்.
  • சூடு, தோலில் எரிச்சல் உண்டானால் உடனே மருத்துவர்களை அணுகி சிகிச்சை பெற வேண்டும்.
  • பழங்களை அதிக அளவில் சாப்பிட வேண்டும்.
  • நண்பகல் 12 மணி முதல் மாலை 3 வரை சூரிய ஒளியில் வருவதை முற்றிலுமாக தவிர்த்தல் வேண்டும்.
ஆரோக்கியம்1 hour ago

சிக்கன் அதிகம் சாப்பிட்டால் ஆபத்தா…!

வேலைவாய்ப்பு2 hours ago

பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட்டில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு2 hours ago

டாடா மெமோரியல் மருத்துவமனையில் வேலைவாய்ப்பு!

சினிமா2 hours ago

அனுராக் கஷ்யப்பை இயக்கும் சசிக்குமார்?

வேலைவாய்ப்பு3 hours ago

ரூ.60 ஆயிரம் சம்பளத்தில் டாடா மெமோரியல் மருத்துவமனையில் வேலைவாய்ப்பு!

வணிகம்4 hours ago

இன்றைய தங்கம் விலை (26/03/2023)!

சினிமா செய்திகள்5 hours ago

‘கீர்த்தி சுரேஷிடம் இதைக் கேட்கவே மாட்டோம்’- மேனகா சுரேஷ்

இந்தியா6 hours ago

எதற்கும் நான் பயப்பட மாட்டேன்: ராகுல் காந்தி ஆவேசப் பேச்சு!

சினிமா செய்திகள்18 hours ago

‘பகாசூரன்’ படத்திற்கு திட்டமிட்ட எதிர்வினை’- இயக்குநர் மோகன்.ஜி

இந்தியா18 hours ago

இந்தியாவின் அடுத்த தலைமுறை கோடீஸ்வரர்கள் – தொழிலதிபர்கள் இவர்கள் தான்..!

வேலைவாய்ப்பு5 days ago

தமிழ்நாடு பொதுப்பணி துறையில் வேலைவாய்ப்பு! மொத்த காலியிடங்கள் 500

வணிகம்6 days ago

இன்று தங்கம் விலை மாற்றமில்லை (20/03/2023)!

உலகம்6 days ago

ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பும் விப்ரோ.. எத்தனை ஊழியர்கள் தெரியுமா?

உலகம்6 days ago

ஏப்ரல் 1 முதல் 4000 ஊழியர்களின் வேலை காலி? பிரபல நிறுவனத்தின் அதிர்ச்சி முடிவு..!

கிரிக்கெட்7 days ago

2nd ODI: 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்திய ஆஸ்திரேலியா!

வேலைவாய்ப்பு3 days ago

தமிழக அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு6 days ago

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!

உலகம்5 days ago

அமேசானின் அடுத்தகட்ட வேலைநிக்கம்.. 9000 பேர்கள் வேலை காலியா?

ugc
வேலைவாய்ப்பு5 days ago

ரூ.2,10,000/- ஊதியத்தில் UGC – ல் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு5 days ago

SBI வங்கியில் வேலைவாய்ப்பு! மொத்த காலியிடங்கள் 868