Connect with us

தமிழ்நாடு

தமிழ்நாட்டில் அடுத்த 3 நாட்களுக்கு வெப்பநிலை உயரும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

Published

on

தமிழ்நாட்டின் பல நகரங்களில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் வாட்டி வதைப்பதன் காரணத்தால், பொதுமக்களின் இயல்பான வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மோக்கா புயல் தமிழ்நாட்டின் வளிமண்டலப் பகுதிகளில் இருந்த ஈரப்பதம் அனைத்தையும் உறிந்து சென்று விட்டது. இதனால் தமிழ்நாட்டில் கோடை வெப்பம் அதிகரிக்கும் என வானிலை மையம் ஏற்கனவே தெரிவித்து இருந்தது.

கோடை வெப்பம்

சென்னையில் மட்டும் 2வது நாளாக நேற்றும், வெப்பம் சதத்தை தாண்டியுள்ளது. நுங்கம்பாக்கம் மற்றும் மீனம்பாக்கம் பகுதிகளில் 105 டிகிரி செல்சியஸ் அதாவது 44 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவாகி உள்ளது. குறிப்பாக தமிழ்நாட்டில் 18 இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேலாக வெப்பம் பதிவாகி உள்ளது.

உயரும் வெப்பநிலை

3 வருடங்களுக்குப் பின்னர், சென்னை நுங்கம்பாக்கத்தில் 106 டிகிரி செல்சியஸ் கோடை வெப்பம் பதிவாகி உள்ளது. மேலும், இன்று முதல் அடுத்த மூன்று நாட்களுக்கு கோடை வெப்பம் 3 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரையில் அதிகரிக்கும் எனவும், சென்னையில் மட்டும் 106 டிகிரி பாரன்ஹீட்டுக்கு கோடை வெப்பம் சுட்டெரிக்கும் எனவும் சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

அதிகளவு வெப்பநிலை மற்றும் வெப்ப அழுத்தத்தின் காரணமாக அசவுகரியம் ஏற்படலாம் எனவும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும், தமிழ்நாட்டின் ஓரிரு பகுதிகளில் மிகவும் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை மையம் தெரிவித்து உள்ளது.

வணிகம்1 மாதம் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்2 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி2 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்3 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?