Connect with us

இந்தியா

கொரோனா பரவலை தடுப்பது எப்படி? பிரதமருக்கு 5 ஆலோசனைகள் கூறிய மன்மோகன்சிங்

Published

on

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறது என்பதும் கடந்த 24 மணிநேரத்தில் 2.75 லட்சம் பேர்களுக்கு கொரோனா வைரஸ் பரவி உள்ளது என்றும் செய்திகள் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில் இந்தியாவில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவது எப்படி என்பது குறித்து 5 ஆலோசனைகளை முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அவர்கள் இந்நாள் பிரதமர் நரேந்திர மோடிக்கு தெரிவித்து கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அதில் குறிப்பிட்ட காலத்திற்குள் தடுப்பூசி போட அரசு நிர்ணயம் செய்ய வேண்டும், அதற்கு முன்னதாக தேவையான அளவு தடுப்பு ஊசி மருந்துகளை கொள்முதல் செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

தடுப்பூசி மருந்துகளை அனைத்து மாநிலங்களும் வினியோகம் செய்ய வேண்டும், 10 சதவீத மருந்துகளை மத்திய அரசு தன் வசம் வைத்திருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார், முன் களப்பணியாளர்கள் யார் என்பதை அறிய 45 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு தடுப்பூசி போட அனுமதிக்க வேண்டும் என்றும் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.

மேலும் தடுப்பூசி மற்றும் உற்பத்தி நிறுவனங்கள் தங்களது உற்பத்தியை அதிகரிக்க தேவையான நிதி சலுகைகளையும் வழங்க வேண்டும் என்றும் பிரதமர் நரேந்திர மோடியிடம் மன்மோகன் சிங் கேட்டுக் கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வணிகம்1 நாள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்1 மாதம் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?