இந்தியா
Manmohan Singh Death: வங்கி, பள்ளி கல்லூரிகள் இன்று இயங்குமா?

டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் வியாழக்கிழமை இரவு காலமானார். 92 வயதான அவர் உடல் நலக்குறைவு காரணமாக டெல்லியில் எயிம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த நிலையில், காலமானார் என மருத்துவமனை தெரிவித்தது.
எனவே 7 நாட்கள் தேசிய துக்கம் அனுசரிப்பதாக மத்திய அரசு அறிவித்து இருந்தது. டிசம்பர் 27, வெள்ளிக்கிழமை காலை 11 மணி அளவில் கூடும் மத்திய அமைச்சரவை கூட்டம் துக்கம் அனுசரிக்க உள்ளதாக அறிவித்துள்ளது.
இந்தியாவின் பிரதமராக இரண்டு முறை இருந்தவர் மன்மோகன் சிங். மத்திய அரசு தேசிய துக்கம் அறிவித்ததால் இன்று வங்கிகள், பள்ளிகள், கல்லூரிகள் இயங்குமா எனக் கேள்விகள் எழுந்துள்ளன.
ஆர்பிஐ பொது விடுமுறை விதிகளின் படிதான் வங்கிகள் இயங்கும். மாநில அரசுகள் பொது விடுமுறை அறிவித்தால் வங்கிகள், பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்படும்.
காங்கிரஸ் கட்சி ஆளும் கர்நாடகா, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் மன்மோகன் சிங் இறப்பை முன்னிட்டு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
பொது விடுமுறை அறிவிக்கப்படாத மாநிலங்களில் பள்ளி, கல்லூரிகள், வங்கிகள் உள்ளூர் விடுமுறை ஏதும் இல்லையெனில் இயங்கும். ஐஎம்பிஸ், என்ஈஃப்டி, யுபிஐ உள்ளிட்ட பரிவர்த்தனைகள் எப்போதும் போல செயல்படும்.
சென்ற 2018-ம் ஆண்டு முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் இறந்த போது மத்திய அரசு 7 நாட்கள் துக்க அனுசரித்ததும், அரசு நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டதும், பல்வேறு மாநிலங்களில் பொது விடுமுறையும் அறிவிக்கப்பட்டு இருந்தது.
காங்கிரஸ் கட்சியும் அக்கட்சியின் முக்கிய நிகழ்வுகள் அனைத்தையும் 7 நாட்கள் துக்கம் அனுசரிக்கும் விதமாக ரத்து செய்துள்ளது.




















