இந்தியா
மாலை நேரச் செய்தித் துளிகள் – 28.02.2026

- டெஹ்ரானில் நிலைமை மோசமாகிக் கொண்டே இருப்பதால் தங்களை மீட்க வேண்டும் என இந்திய மாணவர்கள் கோரிக்கை.
- இஸ்ரேல் மீது ஈரான் தனது சக்தி வாய்ந்த ஏவுகணைகளை வீசியது.
- 70 – க்கும் மேற்பட்ட ஏவுகணைகள் இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் மீது தாக்கியுள்ளது. ஈரான் தனது அதிகார்வ பூர்வ தாக்குதலை தொடங்கியதாக அறிவித்தது. போரை நீங்கள் தொடங்கி விட்டீர்கள் அதை முடிப்பது உங்கள் கையில் இல்லை” என்று ஈரான் அரசு தெரிவித்துள்ளது.
- ஐக்கிய அரபு நாடுகளின் தலைநகர் அபுதாபியில் உள்ள அமெரிக்க நிலைகளின் மீது ஈரான் சக்திவாய்ந்த தாக்குதலை நடத்தியுள்ளது. கத்தார், குவைத் மற்றும் ஐக்கிய அரபு நாடுகள் தங்களது வான்வெளியை தற்காலிகமாக மூடியுள்ளன.
- இந்தியாவிலிருந்து மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமான சேவைகள் நிறுத்தப்பட்டன.
- நடிகர் விஜயின் மனைவி சங்கீதாவின் விவாகரத்து மனு ஏப்ரல் 20ம் தேதி விசாரணைக்கு வருகிறது.
- ஈரானில் உள்ள தொடக்கப்பள்ளி ஒன்றின் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதலில் 42 பள்ளி மாணவிகள் பலி.




