Connect with us

ஆன்மீகம்

தெய்வமே என்றாலும் செய்த தவறுக்கு தண்டனை உண்டு!

Published

on

‘நாம் யாருக்கும் எந்தத் தீங்கும் செய்யவில்லை. பிறகு, நமக்கு ஏன் இத்தனை கஷ்டங்களை ஆண்டவன் தருகிறான்?’

இந்தக் கேள்வி மனித மனத்தில் எழாத நாளே இல்லை. தன்னை நிரபராதியாக நினைத்துக் கொள்வது மனித இயல்பு. ஆனால், நியாயத்தின் அளவுகோல் மனிதன் அல்ல… இறைவன்.

செய்த தவறை கணக்கில் எடுத்துக் கொண்டு, அதற்கான பலனைத் தவறாமல் வழங்குபவன் அவன்.

இதற்கு மிகப் பெரிய எடுத்துக்காட்டு – மகாபாரதம்.

குருக்ஷேத்திரத்திற்குப் பிறகு…

குருக்ஷேத்திர யுத்தம் முடிந்துவிட்டது. அநீதியின் ஆட்சி வீழ்ந்தது.

தருமன் ஹஸ்தினாபுரத்தின் அரசனாக முடிசூட்டிக் கொண்டான்.

ஆனால், யுத்தம் முடிந்தாலும், சிலரின் உள்ளங்களில் புயல் அடங்கவில்லை.

அவர்களில் ஒருவன் – அஸ்வத்தாமன்.

பாண்டவர்களின் வம்சமே அழிந்துவிட வேண்டும் என்று பிரம்மாஸ்திரம் ஏவிய அவன்,

அதற்குப் பிறகு மனநிம்மதியின்றி, உலகெங்கும் அலைந்தான். அவன் மனத்தில் ஒரே கேள்வி நெருப்பாய் எரிந்தது:

“என் தந்தை சத்தியத்தை உயிராகக் கொண்டவர். செஞ்சோற்றுக் கடன் தீர்ப்பதற்காகவே துரியோதனனுக்குப் பக்கமாக நின்றார். ஆனால், அவரை ‘மகன் இறந்தான்’ என்ற பொய்யால் பாண்டவர்கள் அநியாயமாகக் கொன்றனர். என் தந்தை செய்த தவறு என்ன?”

கிருஷ்ணனிடம் எழுந்த கேள்வி

ஒருநாள், அவன் நேராகச் சென்றது – ஸ்ரீ கிருஷ்ணன் இருப்பிடத்திற்கே.

கோபமும், துயரமும் கலந்த குரலில் அஸ்வத்தாமன் கேட்டான்:

“இந்த அநியாயத்திற்குக் காரணமே நீதானே? என் தந்தை செய்த பாவம் என்ன?”

கிருஷ்ணன் மென்மையாகச் சிரித்தான்.

“செய்த பாவத்திற்கு யாராக இருந்தாலும் தண்டனை அனுபவித்தே ஆக வேண்டும்.”

“அப்படி என்ன பாவம்?” – அஸ்வத்தாமன் மீண்டும் கேட்டான்.

துரோணரின் மறைந்த பாவம்

அப்போது கிருஷ்ணன் சொன்னான்:

“உன் தந்தை துரோணர் அனைத்து சாஸ்திரங்களையும் கற்றவர். ஆனால், வறுமையில் வாடியவர். பீஷ்மரின் ஏற்பாட்டால் கௌரவர்களுக்கும் பாண்டவர்களுக்கும் குருவான பின்பு தான் அவருடைய வாழ்க்கையில் வளம் வந்தது. அர்ஜுனன் உள்ளிட்ட அரச குமாரர்களுக்கு

வில் வித்தையின் உச்சத்தை கற்றுக் கொடுத்தார். அதே காலத்தில், ஒரு வேடுவர் இனத்தைச் சேர்ந்த சிறுவன் – ஏகலைவன் உன் தந்தையைச் சந்தித்து, ‘எனக்கும் வில் வித்தை கற்றுக் கொடுங்கள்’ என்று கேட்டான். அவன் அரச குலத்தைச் சேர்ந்தவன் அல்ல என்பதால், உன் தந்தை அவனை நிராகரித்தார்.  ஆனால், ஏகலைவன் மனம் தளரவில்லை. மண்ணில் உன் தந்தையின் சிலையை உருவாக்கி, அவரையே குருவாக நினைத்து அசாதாரண திறமையுடன் வில் வித்தையை தானாகக் கற்றுக் கொண்டான்.

பிறகு ஒரு நாள், அவனின் திறமை அர்ஜுனன் கண்ணில் பட்டது. அங்கே உன் தந்தை செய்திருக்க வேண்டியது என்ன? அவனை ஆசீர்வதித்து, அர்ஜுனனை சமாதானப்படுத்தியிருக்க வேண்டும்.

ஆனால், அவர் என்ன செய்தார்?

அரண்மனைப் பதவி போய்விடுமோ என்ற சுயநலத்தில், வில் வித்தைக்கு உயிரான கட்டை விரலை ‘குரு காணிக்கை’ என்று ஏகலைவனிடம் கேட்டார்.

குரு பக்தியில் ஏகலைவன் அதை மகிழ்ச்சியுடன் கொடுத்தான்.

அவனுக்கு புகழ் கிடைத்தது… ஆனால், அவனுடைய எதிர்காலம் அழிந்தது.

ஒரு திறமையை சுயநலத்திற்காக அழித்த பாவமே உன் தந்தையைச் சூழ்ந்தது. அந்தப் பாவத்தின் பலனாகத்தான், ‘மகன் இறந்தான்’ என்ற எண்ணத்தில் அவர் மனம் உடைந்து உயிர் விட்டார்.

மேலும், துரோணர் தியானத்தில் இருந்தபோது திரௌபதியின் சகோதரன் அவரை வதம் செய்தான். அதைத் தடுக்காமல் பார்த்துக் கொண்ட பாண்டவர்களும் பின்னர் தங்களின் வாரிசுகளை இழந்தனர்.”

தெய்வத்திற்கும் தண்டனை உண்டு

அஸ்வத்தாமன் அமைதியாகக் கேட்டான்.

பின்னர் கேட்டான்:

“நீ நினைத்திருந்தால் இந்த யுத்தமே நடக்காமல் தடுத்திருக்கலாம். ஒரு வம்சமே அழிந்ததை வேடிக்கை பார்த்தாயே… உனக்கு தண்டனை இல்லையா?”

கிருஷ்ணன் சொன்னான்:

“உண்டு.

ஒரு வம்சம் அழிவதற்குக் காரணமாக இருந்ததால், என் யாதவ வம்சமும் அழிவதை நான் பார்த்த பிறகே எனக்கு மரணம் ஏற்படும்.”

அதுவே நடந்தது.

யாதவ வம்சம் அழிந்தது.

காட்டில் தனிமையில் தியானத்தில் இருந்தபோது, மானென நினைத்து ஒரு வேடன் எய்த அம்பால்

ஸ்ரீ கிருஷ்ணனின் அவதாரம் முடிவடைந்தது.

நீதியின் முடிவு

செய்த தவறுக்கு, தெய்வமாக இருந்தாலும் தண்டனை உண்டு.

உப்பு தின்றவன் தண்ணீர் குடித்தே ஆக வேண்டும்.

Janakiraman is a seasoned writer with expertise in politics and health, offering in-depth analysis and insightful perspectives shaped by years of research and observation. A B.Sc. Mathematics gold medalist, his analytical background enhances his ability to interpret complex issues with clarity and precision. Known for blending data-driven insight with real-world relevance, Janakiraman brings credibility and nuance to every topic he explores.

இந்தியா13 minutes ago

ராகுல் பனையூருக்கு வரணுமா?’ – கோட்டைவிட்ட விஜய்; கொதிக்கும் கதர் சட்டைகள்; விரக்தியில் தவெக

தினபலன்18 minutes ago

இன்றைய ராசி பலன் – 05.03.2026

இந்தியா2 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் இதுவரை – 05.03.2026

இந்தியா4 மணி நேரங்கள் ago

இந்தியாவை சூளும் போர் மேகம்.. இந்திய பெருங்கடலில் அமெரிக்க போர்க்கப்பலை தாக்கிய ஈரான் – பதற்றம்

செய்திகள்15 மணி நேரங்கள் ago

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெறாதவர்களுக்கு ரூ.2000 சிறப்பு உதவி – தமிழ்நாடு அரசின் புதிய அறிவிப்பு!

செய்திகள்15 மணி நேரங்கள் ago

நன்னிலம் மகளிர் நில உடைமைத் திட்டம் 2026: 5 ஏக்கர் நிலம் + ரூ.5 லட்சம் மானியம் பெற விண்ணப்பிப்பது எப்படி?

ஆன்மீகம்16 மணி நேரங்கள் ago

புதாதித்ய ராஜயோகம் 2026: மார்ச் மாதம் 4 ராசிகளுக்கு அதிர்ஷ்ட வெள்ளம்!

சினிமா16 மணி நேரங்கள் ago

‘தாய் கிழவி’ 5 நாட்களில் ரூ.25.30 கோடி வசூல் – ராதிகா சரத்குமார் படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வெற்றி!

வணிகம்16 மணி நேரங்கள் ago

HDFC வங்கி ஏடிஎம் விதிகளில் அதிரடி மாற்றம்: ஏப்ரல் 1 முதல் புதிய கட்டணங்கள் அமல்!

ஆன்மீகம்16 மணி நேரங்கள் ago

சுக்ராதித்ய ராஜயோகம் 2026: சூரியன்–சுக்கிரன் சேர்க்கையால் 4 ராசிகளுக்கு அதிர்ஷ்ட காலம்!

வணிகம்4 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலை (01/03/2026)!

வணிகம்4 நாட்கள் ago

US–Israel–Iran போர் பதற்றம் எதிரொலி – தங்க விலை திடீர் உயர்வு, வெள்ளி விலை நிலை

வணிகம்4 நாட்கள் ago

8வது ஊதியக்குழு அப்டேட்: 50% அகவிலைப்படி அடிப்படை ஊதியத்துடன் இணைக்க கோரிக்கை – மத்திய அரசு ஊழியர்களுக்கு விரைவில் நிவாரணமா?

வணிகம்4 நாட்கள் ago

8வது ஊதியக்குழு அப்டேட்: மத்திய அரசு ஊழியர்களுக்கு 5 பதவி உயர்வுகள் உறுதியா? பெரிய முடிவுகள் விரைவில்!

ஆரோக்கியம்4 நாட்கள் ago

தினமும் பிளாக் காபி குடிப்பதின் மறைமுக பக்கவிளைவுகள் என்ன? – கவனிக்க வேண்டிய சிக்னல்கள்

வணிகம்4 நாட்கள் ago

15 ஆண்டுகள் பணியாற்றிய பின் பணி நீக்கம்: இந்திய டெக்கி கற்றுக்கொண்ட 12 கடினமான வாழ்க்கை பாடங்கள்

கிரிக்கெட்4 நாட்கள் ago

2026 டி20 உலக கோப்பை: அரையிறுதிக்கான வாழ்வா–சாவா போர் இன்று! வெஸ்ட் இண்டீஸை கட்டாயம் வெல்ல வேண்டிய அழுத்தத்தில் இந்தியா!

ஆரோக்கியம்4 நாட்கள் ago

ஒரு ஆண்டு முழுவதும் சைவமாக மாறிய ரன்பீர் கபூர் ஃபிட்னஸ் ரகசியம்!

ஆன்மீகம்4 நாட்கள் ago

தெய்வமே என்றாலும் செய்த தவறுக்கு தண்டனை உண்டு!

ஆன்மீகம்4 நாட்கள் ago

2026 சிம்ம ராசி சந்திர கிரகணம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம், தொழில் மற்றும் பணவரவில் பெரிய முன்னேற்றம்!

Translate »
§ 512 of the digital millennium copyright act (“dmca”). Cva paramount pro v2. Bonneville brew coffee.