இந்தியா
மாலை நேரச் செய்தித் துளிகள் – 08.03.2026

- இன்று சர்வதேச மகளிர் தினம் உலகம் முழுதும் அனுசரிக்கப்படுகிறது.
- ஈரான் மீது 9 வது நாளாக தொடரும் இஸ்ரேல், அமெரிக்கா தாக்குதல். உயிரிழந்தோர் எண்ணிக்கை 1300 ஆக உயர்வு. சுமார் ஒரு லட்சம் மக்கள் இடம் பெயர்ந்துள்ளனர். – ஈரான் அரசு.
- காதல் உறவுகள் பெற்றோரின் எதிர்ப்பால் போக்சோ வழக்குகளாக மாறும் சம்பவங்கள் அதிகரிப்பது கவலை அளிக்கிறது. இதனால் சிறார்கள் நீண்ட காலம் சிறையில் இருக்க நேரிடுகிறது. நாகர்கோவில் அருகே நண்பனின் சகோதரியை காதலித்து திருமணம் செய்தவர் மீது தொடரப்பட்ட போக்சோ வழக்கில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் கருத்து.
- பீகார் முதலமைச்சர் நிதீஷ்குமாரின் மகன் நிஷாந்த்குமார் கட்சியின் மூத்த தலைவர்கள் முன்னிலையில் இன்று ஐக்கிய ஜனதா தளத்தில் இணைந்தார். மாநில அரசியலில் கவனம் செலுத்துவார் எனத் தகவல்.
- மேற்கு வங்கத்தில் குடியரசுத் தலைவர் அவமதிக்கப்பட்டதாக எழுந்த சர்ச்சை. மேற்கு வங்க தலைமை செயலாளருக்கு மத்திய உள்துறை அமைச்சகம் நோட்டீஸ்
- ஆல்ஃபாபெட் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியான சுந்தர் பிச்சை அடுத்த 3 ஆண்டுகளுக்கான ஊதியமாக சுமார் ரூ.6300 கோடி பெற உள்ளார்.













