இந்தியா
இன்றைய தலைப்புச் செய்திகள் 20.05.2026

- வெளியானது 10ம் வகுப்புத் தேர்வு முடிவுகள். தேர்வு எழுதிய மொத்த மாணவர்கள் 870643. தேர்ச்சி பெற்ற மொத்த மாணவர்கள் 821405. 1931 அரசு பள்ளி மாணவர்கள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.94.31 % மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாநிலத்திலேயே 97.57 சதவீதம் பெற்று முதலிடம் பிடித்து புதுக்கோட்டை மாவட்டம் சாதனை. 11416 மாற்றுத் திறனாளி மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். சிறைவாசிகள் 354 பேர் தேர்ச்சி.
- 40 ஆண்டுகளுக்கு பிறகு காரைக்கால் பேரளம் இடையே பயணிகள் ரயில் போக்குவரத்து தொடங்கியது.
- அரக்கோணம் – செங்கல்பட்டு இடையே ரூ.993 கோடி மதிப்பில் இரட்டை ரயில் வழித்தடத்திற்கு ஒன்றிய அரசு ஒப்புதல்.
- மத்திய கிழக்கு போர் நெருக்கடிகளைச் சமாளிக்க ஒன்றிய அரசுக்கு இதுவரை இல்லாத அளவுக்கு ரூ.3 லட்சம் கோடி வரையிலான உபரி நிதியை கொடுக்க ஆர்பிஐ முடிவெடுத்துள்ளது.
- ஊரக வளர்சித் துறை அமைச்சராக என்.ஆனந்த் பொறுப்பெற்ற 24 மணி நேரைத்திற்குள் 6 மணி நேர டெண்டர் செட்டிங் செய்து சர்ச்சையில் சிக்கியது தவெக. காஞ்சிபுரம் வட்டார வளர்ச்சி அலுவலரும் அவரது உதவியாளரும் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டனர்.
- தமிழ்நாட்டில் 717 மதுக்கடைகளை மூட தமிழ்நாடு அரச பிறப்பித்த உத்தரவை நிறுத்தி வைத்தது டாஸ்மாக். வழிபாட்டுத்தலம் கல்வி நிறுவனங்களிலிருந்து 500 மீ. வரையிலான தொலைவை கணக்கிடுவதில் குழப்பம் நீடிப்பதால் நிறுத்தி வைப்பு.
- “போர்வாள்“ என்ற பெயரில் அதிமுகவின் அதிகாரப்புர்வ நாளிதழைத் தொடங்கி வைத்தார் எடப்பாடி பழனிச்சாமி. அதிமுகவின் நாளிதழாக இருந்த “நமது அம்மா“ எஸ்.பி.வேலுமணி அணி வசம் சென்ற நிலையில் புதிய நாளிதழ் தொடக்கம்.
















