இந்தியா
மாலை நேரச் செய்தித் துளிகள் – 17.05.2026

- புகழ் பெற்ற உதகை மலர் கண்காட்சி நாளை 18.05.2026 தொடங்கி மே 28ம் தேதி வரை நடைபெறும் என அறிவிப்பு.
- சிபிஎஸ்இ 12ம்வகுப்பு பொதுத்தேர்வில் விடைத்தாள் திருத்தலில் 13000 விடைத்தாள்களில் தவறுகள் நடைபெற்றுள்ளதாக ஒன்றிய கல்வித்துறைச் செயலாளர் சஞ்சய் குமார் உறுதி செய்துள்ளார்.
- பிரபல தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் கே.ராஜன் அடையாறு ஆற்றில் குதித்து தற்கொலை. அவரது உடலை தீயணைப்புத் துறையினர் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிய நிலையில் இந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஜீன் முதல் வாரத்தில் தமிழ்நாடு முழுதும் உள்ள 1 லட்சம் பள்ளி வானங்களை இயக்க மாட்டோம் என தனியார் பிரைமரி, நர்சரி, மெட்ரிக், மேல்நிலை, சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கம் அறிவிப்பு. ரூ.3000 மதிப்புள்ள GPRS கருவியை ரூ.18000 கொடுத்து வாங்கிப் பொருத்த வேண்டும் என RTO க்கள் நிர்பந்தம் எனவும் வாகனங்களுக்கு FC சான்று வழங்க லஞ்சம் கேட்பதாகவும் குற்றஞ்சாட்டி போராட்டம்.
- மாமல்லபுரம் அடுத்த வடநெம்மேலி முதலைப்பண்ணையில் 3 பச்சை நிற அனகோண்டா பாம்புகள் முதல் முறையாக சுற்றுலாப் பயணிகளின் பார்வைக்காக இன்று முதல் காட்சிப் படுத்தப்பட்டன.
- இந்தியாவின் ஐந்தாம் தலைமுறை ஸ்டெல்த் போர் விமாத் திட்டத்துடன் தொடர்புடைய முக்கியமான பாதுகாப்பு விண்வெளி திட்டமான AMCA (Advanced Medium Combat Aircraft) விமான சோதனை மற்றம் ஒருங்கிணைப்பு மையத்தை அமைக்கம் வாய்ப்பை ஓசூரில் அமைக்க தொடர்ந்து 3 ஆண்டுகள் சண்டை போட்டு Defense Research and Development Organisation (DRDO)-இடமிருந்து அனுமதியை திமுக அரசு பெற்றிருந்த நிலையில் இப்போது தாவெக அரசு அமைந்த்தும் இந்த திட்டம் ஆந்திராவிற்கு தாரை வார்க்கப்பட்டு விட்டது.


















