இந்தியா
இன்றைய தலைப்புச் செய்திகள் இதுவரை – 09.03.2026

- ஈரானின் 4 கச்சா எண்ணெய் கிடங்குகளை தாக்கி சுற்றுச்சூழல் பேரழிவை ஏற்படுத்திய அமெரிக்க இஸ்ரேலிய படைகள். – ஒரு கோடி பேர் வசிக்கும் தெவற்ரானில் இந்த தாக்குதலால் நச்ச அமில மழை பெய்யும் அபாயம் இருப்பதாக எச்சரிக்கை. நகர் முழுதும் புகை சூழ்ந்துள்ளதால தொண்டை வலி, கண் எரிச்சலால் மக்கள் கடும் பாதிப்ப.
- தமிழ்நாடு காவல்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் பாஸ்போர்ட், ஆர்.சி.புத்தகம், ஓட்டுநர் உரிமம், அடையாள அட்டை, பள்ளி கல்லூரிி சான்றிதழ்கள் இவற்றில் ஏதேனம் ஆவணங்கள் தொலைந்து போனால் காவல் நிலையத்தை அணுக வேண்டிய அவசியமில்லை. eservices.tnpolice.gov.in என்ற இணையதளத்தில் புகார் பதிவேற்றம் செய்து நகல் எடுத்து வைத்துக் கொள்ள அறிவுறுத்தல்.
- ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கூட்டு குடும்பங்களுக்கு மாதம் 60 கிலோ ரேஷன் அரிசி மற்றும் 2 படுக்கை அறை கொண்ட வீடுகள் வழங்கப்படும் என அறிவித்துள்ளார். மேலும் இரண்டு குழந்தைகள் கொண்ட ஆண்களுக்கு 2 மாதங்கள் மகப்பேறு விடுப்பு மற்றும் பெண் தொழில் முனைவோருக்கான புதிய திட்டங்களையும் அறிமுகப்படுத்தியுள்ளார்.
- விஜய் நடித்துள்ள ஜனநாயகன் தணிக்கைச் சான்றுக்கான மறு ஆய்வு இன்று நடைபெற இருந்த நிலையில் திடீரென ஒத்திவைப்பு. ணிக்கைக்குழு உறுப்பினர் ஒருவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் ஒத்திவைப்பு எனத் தகவல்.
- எவரெஸ்ட் சிகரத்தில் கடல் புதைபடிவங்கள் இருப்பதாக இணையத்தில் வைரலாகும் புகைப்படம் ஏஐ ல் சித்தரிக்கப்பட்டது.
- இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் தேதி நேற்றுடன் நிறைவடைந்த நிலையில் மார்ச் 11 ம் தேதி வரை அவகாசம் நீட்டிப்பு.













