இந்தியா
மாலை நேரச் செய்தித் துளிகள் – 06.03.2026

- தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் திமுக 152 சீட்கள் காங்கிரஸ் உள்பட அணைத்துக் கட்சியினருக்கும் 82 சீட்கள் என ஒதுக்கீடு முடிவு செய்யப்பட்டது.
- யுபிஎஸ்சி தேர்வில் தமிழ்நாட்டில் இருந்து தேர்வான 60 பேரில் 56 பேர் நான் முதல்வன் திட்டத்தில் பயின்றவர்கள் என டாக்டர் சங்கர சரவணன் போட்டித் தேர்வுகள் கூடுதல் இயக்குநர் தகவல்.
- தமிழ்நாடு ரேஷன் கடை பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு அரசாணை வெளியிடப்பட்டது.
- தமிழ்நாட்டிலிருந்து காலியாக உள்ள 6 மாநிலங்களவை இடங்களுக்கு திமுக-2, காங்கிரஸ்-1, தேமுதிக-1, அதிமுக-1 மற்றும் பாமக-1 என தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்கள் ஏற்பு.
- பீகாரில் நிதிஷ்குமாருக்கு பதில் பாஜகவிலிருந்து ஒருவர் முதல்வராவார் என்ற அறிவிப்பு இருக்கும்போதே நிதிஷ்குமாரின் மகன் துணை முதல்வராக வருவார் என்றும் தகவல்கள் கசிந்து வருகின்றன.
- சட்டமன்றத் தேர்தல் முடிந்ததும் எதிர்க்கட்சி தலைவராக கூட எடப்பாடி வரமுடியாது: செல்வப்பெருந்தகை பேட்டி
- மும்பை, ஐதராபாத்தில் அனில் அம்பானி நிறுவனத்தில் ‘ஈடி’ ரெய்டு
- தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி மேற்கு வங்க ஆளுநராக இடமாற்றம். அவர் மீது ரூ.350 கோடி நில மோசடி ஊழல் புகார் எழுப்பப்பட்டுள்ளது. கேரள கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேக்கர் தமிழ்நாடு ஆளுநர் பொறுப்பை கூடுதல் பொறுப்பாக கவனிப்பார்.
- தமிழ்நாட்டில் ஜீலை 17 முதல் ஆகஸ்ட் 30 வரை முதல்கட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பு பணி நடைபெற உள்ளது.
- மத்திய கிழக்கு போர்ச்சூழலால் இந்தியாவில் சமையல் எரிவாயுத் தட்டுப்பாட்டைத் தவிர்க்க எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்க எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களுக்கு ஒன்றிய அரசு உத்தரவு. – எல்பிஜி உற்பத்திக்குத் தேவையான புரோபேன் மற்றும் பியுட்டேன் வாயுக்களை பெட்ரோகெமிக்கல் நிறுவனங்களுக்குக் கொடுக்க தடை. உற்பத்தியாகும் அணைத்து வாயுவையும் இந்தியன் ஆயில், எச்பிசிஎல் மற்றும் பிபிசிஎல் நிறுவனங்களுக்கு மட்டுமே வழங்க அறிவுறுத்தல்.
- கர்நாடகாவில் 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளும், ஆந்திரப்பிரதேசத்தில் 13 வயதுக்குட்பட்ட குழந்தைகளும் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை விதிக்கப்படுவதாக அறிவிப்பு!













