இந்தியா
இன்றைய தலைப்புச் செய்திகள் இதுவரை – 07.03.2026

- மன்னர்களின் பெயரில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களின் பெயர்களை மாற்றக் கோரி பாஜகவின் அஸ்வினி உபாத்தியா தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி. நாட்டை நினையுங்கள். மதத்தை அல்ல என நீதிபதி தெரிவித்துள்ளார்.
- சென்னையில் உச்சநீதிமன்றத்தின் நிரந்தரக் கிளை அமைகிறது. அணைத்து மேல்முறையீட்டு மனுக்களும் இங்கு விசாரிக்கப்படும் – ஒன்றிய அரசு நடவடிக்கை தொடக்கம்.
- செய்திச் சேனல்களின் டிஆர்பி ரேட்டிங் வெளியிடுவதை நிறுத்தி வைக்க பிஏஆர்சி நிறுவனத்திற்கு ஒன்றிய அரசு உத்தரவு. இஸ்ரேல்-ஈரான் போர்பதற்றத்தைப் பயன்படுத்தி சில செய்திச் சேனல்கள் தேவையற்ற பரபரப்பை ஏற்படுத்துவதால் மறு உத்தரவு வரும் வரை டிஆர்பி ரேட்டிங்கை உடனடியாக நிறுத்த உத்தரவு.
- தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநில தேர்தல் தேதி மார்ச் 15 அல்லது 16 ம் தேதி அறிவிக்கப்பட வாய்ப்பு. தமிழ்நாட்டைத் தொடர்ந்து கேரளாவில் இன்ற ஆய்வை முடிக்கும் தேர்தல் ஆணையர்கள் நாளை மார்ச் 8 மதல் 3 நாட்களுக்கு மேற்கு வங்கத்தில் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஆய்வ செய்வர். மேற்கு வங்கத்தில் 5 முதல் 7 கட்டங்களாகவும் மற்ற 4 மாநிலங்களில் ஒரே கட்டமாகவும் தேர்தலை நடத்த திட்டம்.
- வீட்டு உபயோகத்திற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை இன்று முதல் ரூ.60 அதிகரிப்பு. வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டரின் விலை ரூ.115 உயர்வு.
- அரசு போக்குவரத்துக் கழகத்தில் டிரைவர்கள், கண்டக்டர்களை வேறு பணிகளில் ஈடுபடுத்தக்கூடாது. – உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.
- வளைகுடா நாடுகளில் போர்ச்சூழலால் இந்தியாவில் இருந்து பாசுமதி அரிசி ஏற்றுமதி கடுமையாக பாதிப்பு. சுமார் 4 லட்சம் டன் அரிசி துறைமுகங்களில் தேங்கியுள்ளதாக தகவல்.
- வாட்ஸ்அப் மூலம் எளிதாக ஆம்புலன்ஸை அழைக்கும் சேவையை அறிமுகம் செய்ததது தமிழ்நாடு அரசு. 9445030725 என்ற எண்ணுக்கு வறாய் என அனுப்பி ஆம்புலன்ஸை அழைக்கலாம். மொபைல், ஜிபிஎஸ் மூலம் விபத்து நடந்த இடங்களுக்கு ஆம்புலன்ஸ் துல்லியமாக சென்றடையும் எனவும் தெரிவிப்பு.













