இந்தியா
மாலை நேரச் செய்தித் துளிகள் – 03.03.2026

டெல்லியில் 2012 முதல் 2022 வரை பெறப்பட்ட பிறப்புச் சான்றிதழ்கள் செல்லாது என மாநகராட்சி அறிவிப்பு. புதிய சான்றிதழை பெற உத்தரவு.
வளைகுடா நாடுகளில் போர்ச்சூழலால் இந்தியாவில் இருந்து முட்டை ஏற்றுமதி முற்றிலும் முடக்கம். கப்பலில் அனுப்பப்பட்ட 3.50 கோடி முட்டைகள் நடுக்கடலில் கப்பலில் தத்தளிப்பதாக ஏற்றுமதியாளர்கள் கவலை தெரிவிப்பு. நாமக்கல்லில் இருந்து ஈரான், அமீரகம், கத்தார், ஓமன் உள்ளிட்ட நாடுகளுக்கு ஒரு நாளைக்கு 50 லட்சம் முட்டைகள் ஏற்றுமதி ஆவது குறிப்பிடத்தக்கது.
ஈரான் மீதான தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை ஆயிரத்தைக் கடந்தது.
போருக்கு மத்தியில் ஈரானின் கெராஷ் என்ற இடத்தில் 4.3 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பரபரப்பு. அணு ஆயுத சோதனையாக இருக்குமோ? என மக்கள் அச்சம்.
இன்று தங்கம் கிராம் ரூ.15650க்கும் சவரன் ரு.125200க்கும் விற்பனை ஆனது.
இன்று வெள்ளி கிராம் ரூ.315க்கும் ஒரு கிலோ பார்வெள்ளி ரூ.315க்கும் விற்பனை ஆனது.














