இந்தியா
மாலை நேரச் செய்தித் துளிகள் – 05.06.2026

- நீதித்துறையில் ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்த அனுமதி அளித்து புதிய வரைவு விதிகளை வெளியிட்டது உச்ச நீதிமன்றம். ஏஐ மூலம் வழக்கறிஞர்கள் மனுக்கள் வாதங்களை தயாரிக்கலாம். தவறான தகவல்களுக்கு அவர்களே பொறுப்பு. நீதிபதிகளும் தீர்ப்புகளின் சுருக்கம் மொழிபெயர்ப்பு போன்றவற்றுக்கு ஏஐ பயன்படுத்தலாம். ஆனால் தீர்ப்புகளை வழங்க ஏஐ பயன்படுத்தக் கூடாது. இந்த புதிய வரைவு விதிகள் குறித்து ஜீன் 20 வரை பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம் எனவும் அறிவிப்பு.
- சர்வதேச ஒழுங்கை முன்னெடுத்துச் செல்லும் 4 முக்கிய நாடுகளாக இந்தியா சீனா ரஷ்யா மற்றும் அமெரிக்கா ஆகியவை உள்ளதாக ரஸ்ய அதிபர் புதின் பேச்சு.
- தனியார் பள்ளி கல்வி கட்டணங்களை அறிவிப்பு பலகையில் வெளியிடும் உத்தரவுக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு. னல்விக்கடணம் என்பது கறுப்புப் பணம் அல்ல என்றும் தெரிவிப்பு.
- தமிழ்நாட்டின் அரசியல்மொழி இலக்கணத்தை மாற்ற வேண்டும். அடுத்த பொதுத் தேர்தலில் போட்டியிடுவோம் என புதிய கட்சி தொடங்க உள்ள அண்ணாமலை தெரிவித்துள்ளார். இன்னும் ஓரிரு மாதங்களில் அது குறித்த முறையான அறிவிப்பு வெளியிடப்படும் என்ற தெரிவித்துள்ளார்.
- முதல்வர் விஜய் தலைமையில் முதலாவது அமைச்சரவைக் கூட்டம் இன்று காலை 10.05 முதல் 11.20 வரை நடந்திருக்கிறது. இதில் 436 திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாகக் கூறுகிறார் அமைச்சர் நிர்மல்குமார். அதாவது, 75 நிமிடங்களில் 436 திட்டங்கள் குறித்து ஆலோசித்திருக்கிறார்கள்.
- தமிழ்நாட்டில் புதிய மக்கள் இயக்கம் தொடங்கியுள்ளதாக நடிகர் ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். மேலும் அந்த வீடியோவில் “மக்கள் மேடை – இது மக்களின் இயக்கம்! நம் தமிழகத்தின் வளர்ச்சிக்காகவும், நன்மைகளுக்காகவும் ஒன்றிணைவோம்!” என்று தெரிவித்துள்ளார்.
- பாஜக மாநில துணைத்தலைவர் கரு நாகராஜன் பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை இயக்கத்தில் இணைந்ததாக அறிவித்துள்ளார்.














