இந்தியா
ரத்ததானம் செய்தால் கோயிலில் விஐபி தரிசனம் இலவசம் – மத்திய பிரதேசத்தில் ஒரு புதிய முயற்சி.

மத்திய பிரதேசத்தில் ரத்ததானம் செய்யும் பக்தர்கள் அங்குள்ள பிரசித்தி பெற்ற ஓம்காரேஸ்வரர் சிவாலயத்தில் விஐபி இலவச தரிசனத்தில் இலவசமாக அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கோயில் அமைந்துள்ள சந்த்வா மாவட்ட ஆட்சியர் ரிஷவ் புக்தா செய்தியாளர்களிடம் கூறியதாவது.
இந்த மாவட்டத்தில் உள்ள மருத்தவமனையில் சிகிச்சை பெறுவோருக்கு ரத்தத்துக்கான தேவை அதிகம் இருப்பது தெரிய வந்தது. ரத்ததான முகாம்கள் நடத்தி அவற்றின் மூலம் தேவையான அளவு ரத்தம் பெற முடியவில்லை. அவசர சிகிச்சை பெறுவோர் உட்பட பலரின் இரத்த தேவைகளில் தொடர்ந்து பிரச்னை நீடித்து வந்த்து.
எனவே ரத்ததானம் செய்யும் பக்தர்கள் அங்குள்ள பிரசித்தி பெற்ற ஓம்காரேஸ்வரர் சிவாலயத்தில் விஐபி இலவச தரிசனத்தில் இலவசமாக அனுமதிக்கப் படுவார்கள் என்று அறிவிக்கப் பட்டது
இந்த முயற்சிக்கு நாங்கள் எதிர்பார்த்ததை விட மிகச் சிறப்பான வரவேற்பு கிடைத்தது. வாரந்தோறும் 150 முதல் 200 யுனிட் ரத்தம் வரத் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து அந்த கோயிலின் அருகிலேயே ரத்தம் சேகரிக்க ரத்த வங்கி வசதி ஏற்படுத்தப்பட்டது.
இந்த கோயிலில் எப்போதும் பக்தர்கள் கூட்டம் அலைமோதும் என்பதால் பக்தர்கள் சாதாரணமாக கோயிலுக்குள் சாதி தரிசனம் செய்ய குறைந்தது 3 முதல் 4 மணி நேரம் வரை ஆகும். இவ்வாறு ரத்ததானம் செய்யும் பக்தர்கள் அவர்களது குடும்பத்தினருடன் விஐபி தரிசனத்தில் இலவசமாக சென்று சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவதால் தானாக முன்வந்து ரத்ததானம் செய்வோரின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
அத்துடன் ரத்ததான சான்றிதழ் கோயில் பிரசாதம் ஓம்காரேஸ்வரர் படம் ஆகியவையும் அவர்களுக்கு பரிசாக அளிக்கப்படுகின்றன. எங்களது இந்த முயற்சியால் அவசரமாக ரத்தம் தேவைப்படும் பலரின் உயிர் காக்கப்படுகிறது என்றார்.











