இந்தியா
அடுத்த வாரிசு – வடகொரியாவிற்கு புதிய தலைமை தயாராகி வருகிறது.

கிம் ஜொங்–உன் அல்லது கிம் ஜோங்–யூன் முன்னதாக கிம் ஜொங்–ஊன் அல்லது கிம் ஜங்–ஊன் மறைந்த வட கொரியத் தலைவர் கிம் ஜொங்-இல்லின் மூன்றாவது மற்றும் கடைசி மகனாவார் 2010ஆம் ஆண்டின் கடைசிக்காலங்களில் இருந்து, நாட்டுத் தலைமையை ஏற்க தயார்நிலையில் வைக்கப்பட்டிருந்த வாரிசும் ஆவார். அவரது தந்தையாரின் மறைவிற்குப் பின்னர் “பெரும் அடுத்த தலைவராக” வட கொரியத் தொலைக்காட்சிகளில் அறிவிக்கப்பட்டவரும் ஆவார்.
தென்கொரியாவிற்கு சிம்ம சொப்பனமாக விளங்கும் வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் தனது 13 வயது மகள் கிம் ஜீ ஏ வை தனது அடுத்த வாரிசாக உருவாக்கி வருகிறார.
13 வயதே ஆகும் கிம் ஜீ ஏ கடந்த செப்டம்பரில் சீனாவிற்கு வருகை தந்ததோடு சில உயர்மட்ட நிகழ்வுகளில் தனது தந்தையுடன் இணைந்து காணப்பட்டார். அது அவரின் முதல் வெளிநாட்டுப் பயணம்.
கிம் ஜாங் உன் தனது கவச ரயிலில் இருந்து இறங்கும்போது அவருக்குப் பின்னால் நேர்த்தியான உடையணிந்து நின்ற அந்த சிறுமி பார்வையாளர்களைத் தன் பக்கம் ஈர்த்தார்.
கிம் ஜாங் உன்னுக்கும் அவரது மனைவி ரி சோல் ஜீக்கும் பறந்த மூன்று குழற்தைகளில் கிம் இரண்டாவது குழந்தை ஆகும்.
கிம் ஜாங் உன்னின் மதிப்பிற்குரிய மகள் என்று விவரிக்கப்படும் கிம் ஜீ ஏ அண்மைக்காலத்தில் உயர் அதிகாரிகளுக்கான சில விருந்துகளிலும் கலந்து கொண்டார்.
கிம் ஜீ ஏ வுக்கு குதிலை சவாரி, பனிச்சறுக்கு மற்றும் நீச்சல் பிடிக்குமாம். தலைநகர் பியோங்யாங்கில் உள்ள வீட்டிலேயே அவர் கல்வி பயின்றாராம்.
இதுவரை ஒரு பெண்ணால் கூட வழிநடத்தப்படாத ஆணாதிக்க அரசு என்று வடகொரியாவின் மீது உள்ள பிம்பத்தைச் சமாளிக்க கிம் தனது மகளை அறிமுகப்படுத்தி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.














