தமிழ்நாடு
சென்னை மெட்ரோ ரயில் நேரம் மாற்றம்; மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு!
சென்னை மெட்ரோ ரயில் இயங்கும் நேரம் இன்று முதல் மாற்றம் செய்யப்படுவதாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இரவு நேர ஊரடங்கு மற்றும் முழு நேர ஊரடங்கு காரணமாக சென்னை மெட்ரோ ரயிலின் நேரம் மாற்றப்பட்டது என்பது தெரிந்ததே. அதிகாலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை இயங்கிக் கொண்டிருந்த சென்னை மெட்ரோ ரயில், இரவு நேர ஊரடங்கு காரணமாக நேரம் குறைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு மற்றும் முழு ஊரடங்கு ரத்து செய்யப்பட்டுள்ளதை அடுத்து மீண்டும் வழக்கம்போல் சென்னை மெட்ரோ ரயில் பழைய நேரத்திலேயே இயங்கும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது
இதனால் அதிகாலை 5 மணிக்கு முதல் மெட்ரோ ரயில் தொடங்கும் என்றும் இரவு 11 மணிவரை இனிமேல் மெட்ரோ ரயில் இயங்கும் என்றும் மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கை இதோ: