உலகம்
சென்னை நிறுவன கண் மருந்தால் ஒருவர் பலி.. அமெரிக்கச் சந்தையிலிருந்து மருந்துகளைத் திரும்பப் பெற முடிவு!
சென்னையிலிருந்து செயல்பட்டு வரும் குலோபிள் பர்மா நிறுவனம், அமெரிக்கச் சந்தையிலிருந்து தங்களது மருந்துகளைத் திரும்ப பெறுவதாக அறிவித்துள்ளது.
அமெரிக்காவில் எஸ்ரிகெர், எல்எல்சி மற்றும் டெல்சம் பார்மா விநியோகித்த ஆர்ட்டிஃபீஷியல் டியர்ஸ் கண் மருந்துகளை பயன்படுத்தியவர்களுக்கு இரத்த கொதிப்பு, நிரந்த கண் பார்வை இழப்பு, கண் தொற்று மட்டுமல்லாமல் ஒருவர் அதற்காகப் பலியும் ஆகியுள்ளார்.
இதுவரையில் இந்த நிறுவன கண் மருந்தால் 55 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
அண்மையில் இந்தியாவிலிருந்து உற்பத்தி செய்யப்பட்ட இருமல் மருந்தால் உஸ்பெகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் குழந்தைகள் இறந்த நிலையில், இப்போது சென்னை நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட கண் மருந்தால் அமெரிக்காவில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
கண் மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் இதுபோன்ற கண் மருந்துகளைப் பயன்படுத்துவதை தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.